Tuesday 13 August 2019

மஹாகணேச பஞ்சரத்னம் Maha Ganesa Pancha Ratnam tamil meaning.

  இன்றைய தினம் 25.8.2021           புதன்கிழமை 
மஹாசங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு 15 நாட்கள் முன்பு, அதாவது ஆவணி தேய்பிறையில் வரும் சதுர்த்தியை 'மஹா சங்கடஹர சதுர்த்தி' என அழைப்பர். ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வெவ்வேறுவித  வடிவம் அதன்திரு நாமம் மற்றும் பீடம் என வினாயகரின் வழிபாட்டு முறை மாறுபடும். 
  இந்த மஹாசங்கடஹர சதுர்த்தியில் அவர் "ஹேரம்ப கணபதியாக" ஐந்து தலை, பத்து கரங்கள் மற்றும் அவர் பீடமாக சிம்ம வாஹனமும் இடம் பெறும். நான்கு தலைகள் நாற்றிசை நோக்கியும், இவைகளுக்கு மேல் ஐந்தாவது தலை மேல் நோக்கியும் அமைந்திருக்கும். 'ஹே' என்றால் பயம் அதனால் வரும் துன்பம். 'ரம்ப' என்றால் அறுப்பவர். பக்தர்களின் துயரத்தைக் களைந்து ஞானத்தைத் தருபவர் இந்த ஹேரம்ப வினாயகர். இந்த தோற்றம் தந்தையான சிவனின் அம்சமாகவும், தாய் பார்வதியின்  சிம்ம வாஹனத்திலும் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. 
image.png
இத்திருநாளில் ரத்னத்தி
கணேச பஞ்சரத்னம் தமிழ் அர்த்த விளக்கம்.
मुदा करात्त मोदकं सदा विमुक्ति साधकं
कलाधरावतंसकं विलासि लोक रक्षकम् .
अनायकैक नायकं विनाशितेभ दैत्यकं
नताशुभाशु नाशकं नमामि तं विनायकम् .. १.
Image result for vinayagar images
  Mudakaratha Modakam Sada Vimukthi Sadhakam Kaladaravathamskam Vilasi Lokarakshakam
Anaayakaik Nayakam Vinashithebha Dhyathakam 
Natha shubhashu Nashakam Namami Tham Vinayakam 1
கையில் மோதகத்தை (கொழுக்கட்டை) வைத்திருப்பவரும்,அவரை வணங்குபவருக்கு முக்தியை தருபவரும், முன் நெற்றியில் பிறைச் சந்திரனை தாங்கியவரும், இவ்வுலகத்தின் தலைவனும், தனக்கு மேல் தலைவன் இல்லாதவரும், யானை முகம் கொண்ட 'கஜாசுரனை' அழித்தவரும், அவர்தம் அடியார்களின் பாவங்களை விரைவில் நாசம் செய்பவரும் ஆகிய வினாயகரை நான் வணங்குகிறேன். 

Image result for gajamukha suran image

  नतेतराति भीकरं नवोदितार्क भास्वरं 
  नमत् सुरारि निर्जरं नताधिकापदुद्धरम् . 
  सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
  महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् .. २..
Nathetharathi Bheekaram Namodhitharka Bhaswaram
Namathsurari Nirjaram Nathadikaa Paduddaram 
Sureswaram   Nidhishwaram Gajeswaram Ganeswaram
Maheshwaram Thvamashraye Parathparam Nirantharam
நான் தினமும் வணங்கக்கூடிய விநாயகர், அவர்தம் எதிரிகளுக்கு அச்சத்தை விளைவிப்பவரும், உதிக்கின்ற சூரியனைப் போல் ஜொலிப்பவரும், தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் போற்றப்படுபவரும், பக்தர்களின் துயரத்தைப் போக்கி அவர்களுக்கு பேரின்பத்தை அருள்பவராக விளங்குகிறார்.
समस्त लोक शंकरं निरस्त दैत्य कुन्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रं अक्षरम् .
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् .. ३..
Samastha Loka Shankaram Nirastha Dhaithya Kunjaram
Daretharodaram Varam VareBhavakthra Maksharam
Krupakaram Kshamakaram Mudhakaram Yashaskaram
Manaskaram Namskrutham Namskaromi Bhaswaram
இவ்வுலக அனைத்துயிர்க்கும் இன்பத்தை தருபவரும், கஜாசுரனை வதைத்தவரும், பெருத்த வயிறும், அழகிய யானை முகம் கொண்டவரும், பிறப்பற்றவரும், கருணையுடன் நம் குற்றங்களை மன்னித்து, இன்பத்தை தருபவருமான சூரியனைப் போன்ற ஒளிபொருந்திய அவரை உளமார வணங்குகிறேன்.
अकिंचनार्ति मर्जनं चिरन्तनोक्ति भाजनं 
पुरारिपूर्वनन्दनं सुरारि गर्व चर्वणम् .
प्रपञ्चनाश भीषणं धनंजयादि भूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् .. ४..
Akincha narthi marjanam Chirantha Nokthi Bhajanam
Purari Purva Nandanam Surari Gurva Charvanam
Prapancha nasha Bheeshanam Dhananjayadi Bhooshanam
Kapola Danavaranam Bhaje Purana Varanam
Image result for god vinayaka images
வறியவர்களின் துயரங்களை (ஏழைகள்) துடைப்பவனும், 'ஓம்' கார நாதனும், பரமசிவனின் தலைமகனும், தேவர்களின் கர்வத்தை களைந்தவரும், அல்லது தீய குணங்களை வேரறுப்பவரும், கொடிய நச்சுத் தன்மைவாய்ந்த 'தனஞ்ஜயன்' முதலான நாகத்தினை இடுப்பில் ஆபரணமாக அணிந்திருப்பவரும், வேதங்களால் புகழப்பெறுபவனுமாகிய ஆனைமுகனை வணங்குகிறேன்.
Image result for god vinayaka images
नितान्त कान्त दन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तराय  कृन्तनम् 
 हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेकमेव चिन्तयामि सन्ततम् .. ५..
Nithantha Kantha Dhantha Khanthi Mantha Kantha Kathmajam
Achinthya Roopa Manthaheena Mantharaya Krunthanam
Hrudanthare Nirantharam Vasanthameva Yoginam
Thamekadantha Mevatham Vichintha Yami Santhatham
Image result for god vinayaka images
உடைந்த தந்தத்தினை உடையவரும், பளபளக்கும் காந்தியுடைய தும்பிக்கையையுடையவரும், சிவனுக்கு பிரியமானவரும், நம் தீய சிந்தனையை களைந்து, அறிவு, ஞானத்தை வழங்குபவரும்,யோகிகளின் ஹ்ருதயத்தில் நிரந்தரமாய் குடியிருந்து வசந்தத்தை அருள்பவரும், ஏக தந்தம் உடைய வினாயகரை எப்பொழுதும் மனதில் சிந்தித்திருப்பேன்.

Image result for god vinayaka images
                    ..फल श्रुती ..
महागणेश पञ्चरत्नं आदरेण योन्ऽवहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन्ं गणेश्वरम् .
अरोगतां अदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्ट भूतिमभ्युपैति सोऽचिरत् ..
…Phala Shruti …
Maha Ganesha Pancharathna Madarena Yonvaham
Prjalpathi Prabhathake Hrudismaram Ganeswaram
Arogathaam Dhoshathaam Susahitheem Suputhratham
Samahithaayu rashta Bhoothi mabhu paithi Sochiraath
இந்த மஹாகணேசரது பஞ்சரத்னத்தை தினமும் காலையில் முழு மனதொடு பாராயணம் செய்தால் அடையக் கூடிய நன்மை என்னவெனில், பலவித தோஷங்களிலிருந்து விடுபடுவதோடு, உடல், மன ஆரோக்கியம் பெறுவர்.மேலும் நல்ல கல்வி, மேன்மை, நல்ல குழந்தைகள், மன நிம்மதி இவற்றோடு மறுமையில் முக்தி பேறும் பெறுவர்.