தமிழகப் பெண்களால் மட்டுமே வழிபடப்படும் ஔவையார் பூஜை.
இது செவ்வாய் பிள்ளையார் விரத பூஜை அல்லது ஔவையார் விரத பூஜை என்று அழைக்கப்படுகிறது.
இந்த விரதத்தில் பூஜை மற்றும் பிரசாதம் என்று எந்த வகையிலும் ஆண்களுக்கு துளியும் அனுமதி இல்லை. முழுக்க முழுக்க பெண்களால்
வயதான பெண்மணியின் தலைமையில் நள்ளிரவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அசந்தா ஆடியிலும், தப்பினா தையிலும், மறந்தா மாசியிலும் என்ற சொல்லாடலுடன் இந்த மூன்று மாதங்களில் எப்படி வசதியோ அப்பொழுது மூன்று செவ்வாய்கிழமைகளில் விரதமிருக்கின்றனர்.
முடிவில் ஔவையாரின் பிள்ளையார் வழிபாட்டுக் கதையைக் கூறி, பூஜைக்காக தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளை அங்கேயே பெண்கள் சாப்பிட்டுவிட்டு, பூஜை திரவியங்களை ஓடும் ஆற்றில் கரைத்துவிட்டுச் சென்று விடுவர்.
தாயை இழந்த ஏழை இளம் பெண் ஒருத்தி தன் தந்தை மற்றும் ஏழு அண்ணன்கள் பகலில் உழைத்துக் கொண்டு வரும் நெல்மணிகளை, பொறுமையாக இடித்து உணவு தயாரித்து அவர்களுக்கு கொடுத்து விட்டு, தனக்கு மீந்திருப்பதை சாப்பிடுவாள்.
இப்படியான சமயத்தில் ஒருமுறை ஔவைப்பாட்டி, அவளது இருப்பிடம் வந்து தனக்கு உணவு அளிக்குமாறு அப்பெண்ணிடம் கேட்டாள்.
வறுமையின் காரணமாக கந்தல் ஆடை அணிந்திருந்த அப்பெண், அப்படியே வெளியில் வர கூச்சப்பட்டு, ஔவைக்கு உணவு அளிக்க இயலாத நிலைமையையும் வீட்டினுள்ளிருந்தே அழுதவாறு கூறினாள்.













































































































































































































