Sunday, 8 February 2026

ஔவையார் பூஜை.



தமிழகப் பெண்களால் மட்டுமே வழிபடப்படும் ஔவையார் பூஜை.

 இது செவ்வாய் பிள்ளையார் விரத பூஜை அல்லது ஔவையார் விரத பூஜை என்று அழைக்கப்படுகிறது.

இந்த விரதத்தில் பூஜை மற்றும் பிரசாதம் என்று எந்த வகையிலும் ஆண்களுக்கு துளியும் அனுமதி இல்லை. முழுக்க முழுக்க பெண்களால் 

வயதான பெண்மணியின் தலைமையில் நள்ளிரவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அசந்தா ஆடியிலும், தப்பினா தையிலும், மறந்தா மாசியிலும் என்ற சொல்லாடலுடன் இந்த மூன்று மாதங்களில் எப்படி வசதியோ அப்பொழுது மூன்று செவ்வாய்கிழமைகளில் விரதமிருக்கின்றனர்.

முடிவில் ஔவையாரின் பிள்ளையார் வழிபாட்டுக் கதையைக் கூறி, பூஜைக்காக தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளை அங்கேயே பெண்கள் சாப்பிட்டுவிட்டு, பூஜை திரவியங்களை ஓடும் ஆற்றில் கரைத்துவிட்டுச் சென்று விடுவர். 


தாயை இழந்த ஏழை இளம் பெண் ஒருத்தி தன் தந்தை மற்றும் ஏழு அண்ணன்கள் பகலில் உழைத்துக் கொண்டு வரும் நெல்மணிகளை, பொறுமையாக இடித்து உணவு தயாரித்து அவர்களுக்கு கொடுத்து விட்டு, தனக்கு மீந்திருப்பதை சாப்பிடுவாள்.

இப்படியான சமயத்தில் ஒருமுறை ஔவைப்பாட்டி, அவளது இருப்பிடம் வந்து தனக்கு உணவு அளிக்குமாறு அப்பெண்ணிடம் கேட்டாள்.

வறுமையின் காரணமாக கந்தல் ஆடை அணிந்திருந்த அப்பெண், அப்படியே வெளியில் வர கூச்சப்பட்டு, ஔவைக்கு உணவு அளிக்க இயலாத நிலைமையையும் வீட்டினுள்ளிருந்தே அழுதவாறு கூறினாள்.

     

ம்m



மனம் இளகிய ஔவை பாட்டி, தான் பிச்சையாகப் பெற்ற அரிசியிலிருந்து சிறிதும், ஒரு தேங்காயும் அப்பெண்ணிடம் கொடுத்து, என்னை நினைத்து 'செவ்வாய்ப்பிள்ளையார்' விரதமிருந்து வழிபாடு செய்! அப்புறம் பார்! உன் நிலைமை மாறி முன்னேறும் என்று கூறி, பூஜை முறையையும் சொல்லிக் கொடுத்து வாழ்த்திச் சென்றாள்.
அதன்படியே, அப்பெண்ணும் தன் வீட்டார் உறங்கியபின், பூஜைக்கான ஏற்பாட்டினை செய்ய, தன் வீட்டில் நெருப்புக்கு கூட வழியில்லாததால், அருகில் இருந்த சுடுகாட்டிற்கு சென்று வெட்டியானிடம் நெருப்பு பெற்று, வரும் வழியில் புன்னை மற்றும் புளிய மரத்தின் இலைகளைப் பறித்து வந்து, இளங்கன்றின் சாணத்தை பிள்ளையாராகப் பிடித்து வைத்து, ஔவைபாட்டியிடம் பெற்ற அரிசியைக் கொண்டு செய்த கொழுக்கட்டைகளை படைத்து வழிபட்டாள். அதன் பயனாய் விரைவிலேயே அவர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும், தன் ஏழு அண்ணன்களுக்கும் திருமணம்  செய்வித்தாள். அப்பெண்ணின் குணநலன்களால் கவரப்பட்ட ஒரு செல்வந்தன் வலிய பெண் கேட்டு திருமணம் புரிந்தான்.
 அதன்பின், வழிவழியாக தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக செட்டிநாட்டுப் பக்கங்களில் இன்றளவிலும் இச்செவ்வாய் பிள்ளையார் விரதபூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பூமம்
த்ட்