Saturday 16 April 2022

சித்ரா பௌர்ணமி 2022

 


இன்றைய தினம் 16.4.2022 சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி. முழு நிலவை பார்ப்பது என்பது கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வையும் புத்துணர்வையும் அளிக்கக்கூடியது.  ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி வருகிறது என்றாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனெனில், வருடத்தில் ஒரு முறை மட்டுமே  இந்த சித்திரை மாதத்தில் மட்டுமே முழு நிலவாக களங்கங்கள் இல்லாமல் சூரியன் மறையும் பொழுது, பிரகாசமான ஒளிக்   கிரணங்களுடன்  காட்சி அளிப்பதே இதன் சிறப்பு.   


இந்த நாளில் நம் பண்டைய தமிழ் மக்கள் தன் உற்றார், உறவினருடன் நதி நிலைகளில் பௌர்ணமி ஒளியில், அமர்ந்து உணவருந்தி, ஆடிப் பாடி மகிழ்வர்.

இந்த சித்ரா பௌர்ணமி நாளில், 'சித்ரகுப்த பூஜை' விசேஷமானது. இதையே பண்டைய நாட்களில் சித்திர புத்திர நயினார் நோன்பு' என நம் தமிழக மக்கள் பூஜித்தனர். யார் இந்த சித்திர குப்தர்? அவரது சரிதத்தை அறிவோம்!


சித்திரகுப்தர் நம் பாவ, புண்ணிய கணக்குகளை, குறித்து வைத்துக் கொண்டு உயிர்களது வாழும் காலம் நிறைவுற்றதும் எமதர்மனிடம், அவ்வுயிர்களது நற்பலன் அல்லது தண்டனை அதாவது, சொர்க்கமா? நரகமா? என்பது பற்றி எடுத்துக் கூறுவாராம்.


   சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரம் பௌர்ணமி கூடிய சுபதினத்தில் அவதரித்தவர். 'குப்தர்' என்றால் இரகசியம். நம்மைப் பற்றிய இரகசியங்கள்,நாம் மனத்தால் நினைக்ககூடிய நன்மை தீமைகளைக் கூட இவரிடமிருந்து மறைக்க இயலாது.அதனால் இவர் 'சித்திரகுப்தர்' என அழைக்கப்படுகிறார்


       இவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகளிலிருந்து ஒன்று:


           ஒருமுறை, அஷ்ட திக் பாலகர்கள் ( 8 திசைகளின் தலைவர்கள்) சிவன் பார்வதியை சந்திக்கச் சென்றனர். அனைவரும் மகிழ்வுடன் இருக்க, யமதர்மன் மட்டும் சோர்வுடன் இருந்தார். அது பற்றி எம்பெருமான் வினவ, ஐயனே! நான், தனி ஒருவனாக அனைத்து உயிர்களின் காலக் கெடு, அவற்றின்பாவ புண்ணிய கணக்குகள் குறித்து, அதற்கான பலன்கள் வழங்குவது என எனது வேலைப் பளு மிகுதியாக உள்ளது. அதனால் நம்பத் தகுந்த உதவியாளன் இருந்தால், என் வேலை எளிதில் நிறைவுறும். அதற்கு தாங்கள் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டினார்.


  சிவபிரானும், காலம் கனியும் பொழுது, உனக்குத் தகுந்த உதவியாளன் கிடைப்பான் என உறுதி கூறி , அதற்கான  பொறுப்பை பிரம்மனிடம் ஒப்படைத்தார். முதலில் அப்பொறுப்பை நினைத்து திணறி பிரம்மன் தவித்தாலும், சூரிய தேவனைக் கண்டதும் அவர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அகில உலகையும் சுற்றி வரக் கூடிய இவனால் உருவாக்கப்படும் குழந்தையே இதற்குச் சரியான ஆள்  என நினைத்து மகிழ்ந்தார். 


   உடன், வானவில்லை அழகிய பெண்ணாக உருமாற்றி, அவளுக்கு 'நீளாதேவி' என பெயரிட்டு, சூரிய தேவனின் மனதில் தன் மாயையால் காதல் எண்ணத்தை உருவாக்கி, நீளாதேவியை மணமுடித்தார். 


 இவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு 'சித்திர புத்திரன் எனப் பெயரிட்டனர். சூரியனே அவருக்கு குருவாகவும் இருந்து பல கலைகளைப் பயில்வித்ததோடு, சிவபிரானைக் குறித்து தவம் இயற்றி அரிய பல வரங்கள் பெறும் படியும் அறிவுறுத்தினார். அவ்வண்ணமே அவரும், தவமியற்றி, சிவனாரிடமிருந்து, அறிவாற்றலும், அனைத்து சித்திகளையும் கைவரப் பெற்றார்.


 உடன் அதனை சோதிக்க எண்ணி, தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். இதனை அறிந்து பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். பிரம்மன், சூரியனிடம் இதுபற்றி முறையிட, அவரும் சித்திர புத்திரனை அழைத்து, மகனே! 


உயிர்களின் இரவு பகலைக் கணக்கிட்டு,  ஒவ்வொரு உயிர்களின் வாழ்க்கையையும் நெறிபடுத்துபவன். எனவே, நீ அவர்களது பாவ, புண்ணியத்தை கணக்கெடுத்து, உனது அண்ணனான யமதர்மனுக்கு உதவியாக பணி செய்வாயாக! இதற்காகவே நீ படைக்கப்பட்டவன். படைப்புத் தொழில் உனக்கானதன்று. அது பிரம்மனது பணி. என வாழ்த்து கூறி எழுத எழுத தீராத ஏட்டுப் புத்தகத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார். 



      மற்றவர்களின் இரகசியத்தை அறிபவராகவும், அந்த இரகசியத்தை யாரும் அறியாதபடி இரகசியமாகக் குறித்து தக்க சமயத்தில் அதை வெளிபடுத்தி பலன்களை அளிப்பதனாலும் 'சித்திர குப்தர்' என பெயர் காரணமாயிற்று.


 ஆயினும் கிராமப்புறங்களில் இவருக்கு 'சித்திர புத்திரன் பூஜை' என்றே கொண்டாடுகின்றனர்.  இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தன் படம் வரைந்து, பூஜை திரவியங்களுடன் ஓலைச் சுவடி எழுத்தாணி இவற்றையும் வரைந்து, சக்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பாயசம் இன்னபிற இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து, பூஜையின் இறுதியில் ஊர் பெரியவர் சித்திர குப்தனின் வரலாற்றை படிக்க, தங்களது பாவச் சுமையைக் குறைத்து, புண்ணிய பலனை அதிகரிக்கவும், நல்ல வாழ்வை அளிப்பதோடு, யமராஜனிடம் தனக்காக பரிந்துரைக்கவும் வேண்டிக் கொள்வர்.   இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது. 





Friday 15 April 2022

தாயாகத் திகழ்ந்தவர்.


 மங்களம் என்பது அவர் நாமம் - நித்தம்

உரைத்திட்ட மொழிகளும் மங்கலம்- எங்கள்

வாழ்விலும் வழி நடத்தினார் மங்கலமாய்.

உறவின் பெயரில் தான் மாமியார் - ஆனால்

அன்பு மழை பொழிந்தார் - அன்னையாய்.

இன்று அவரது 90 ஆவது பிறந்த நாள்.

                       15.4.2022.

                                     தங்களன்புள்ள

என்றென்றும் உங்கள் நினைவில் வாழும்

                   அன்புச் செல்வங்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Thursday 7 April 2022

ஆரத்தி பாடல்.

                    ஆரத்தி பாடல்.


ஓம் ஸ்ரீஜய ஜய ஜய சக்தி

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி

ஜய ஜய என தினம்

பாடி பணிந்தோம்

ஜகமெங்கும் அமைதியை தா

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க

தேவையெல்லாம் அடைய

அம்மம்மா தேவையெல்லாம் அடைய

பக்தி பெருகிட பாடி உருகிட

பணிப்பாய் அன்பில் எமை

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


இரண்டுகள் போக மூன்றுகள் அகல

ஈஸ்வரி வரம் அருள்வாய்

அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்

கரங்குவித்தோம் இனி காலை விடோமடி

கருணையுடன் அணைப்பாய்

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


காசினில் எங்கும் வேற்றுமை போக

கருத்தினில் அன்பருள்வாய்

அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்

தேஜசுடன் வாழ காட்டடி காட்சி

தேவி உன் அடைக்கலமே

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான

நல்லொளி தீபம் வைத்து

ஞான நல்லொளி தீபம் வைத்து

நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்

ஞாலத்துக்கு அமைதியை தா

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


ஓம் கணபதி சாயி ஷண்முக நாதா

ஓம் த்ரிகுண தீதா க்ருஷ்ணா

ஓம் த்ரிகுண தீ தா க்ருஷ்ணா

ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ சம்போ

ஓம் ஜய ஜகத் ஜனனி

ஓம் ஸ்ரீ ஜய ஸத்குருதேவா

     

       2. அம்பாள் ஆரத்தி 

ஆரத்தி எடுத்து வந்தோம் தேவி உனக்கு

ஆரத்தி எடுத்து வந்தோம்.


அருளைப் பொழியும் அகிலாண்டேஸ்வரி ஆற்றலை அளிக்கும் ஆதிசக்தியே

இன்ப வாழ்வருளும் இமயவன் புத்ரி

ஈகை குணம் கொண்ட ஈஸ்வரியே- உனக்கு. (ஆர்த்தி எடுத்து வந்தோம் )


உலகினைப் படைத்த உமையவளே 

ஊண் உறக்கம் அளித்த ஊரணியே 

எங்கும் நிறைந்த பூரணியே 

ஏற்றத்தை அளிக்கும் காரணியே - உனக்கு


ஆரத்தி எடுத்து வந்தோம்.


ஐங்கரன் தாயே சங்கரியே 

ஒளிமயமான நாயகியே 

ஓம்கார ரூபி ஏகாக்ஷரியே.. உனக்கு 

ஆரத்தி எடுத்து வந்தோம்

.

        3.  அஷ்டலக்ஷ்மி ஆரத்தி


[07/10/2023, 15:04] Vasanthi: ஆனந்தபைரவி


ஆரத்தி எடுத்தே உன் பதம் பணிந்தோம்

நாரணன் மனைவியே நாராயணியே 

நான்மறை போற்றும் நாயகியே 

நானிலம் காக்கும் நறுமணியே.

 (-)


பேரின்ப வாழ்வருளும் 

ஆதிலக்ஷ்மி

பசி பிணி நீக்கும் 

தான்யலக்ஷ்மி


பவபயம் போக்கும் 

தைர்யலக்ஷ்மி 


ராஜ வாழ்வளிக்கும் 

கஜலக்ஷ்மி 

பத பநிஸ்.. நிஸ் க்ரிஸ் |

ஸ்நிதப மகரிஸ| கமபமகரிகம || (ஆரத்தி)


மழலைச் செல்வம் தரும் 

ஸந்தானலக்ஷ்மி 


எங்கும் எதிலும் வெற்றியை நல்கும் 

விஜயலக்ஷ்மி 


மேன்மை குணமருளும் 

வித்யாலக்ஷ்மி 


சகல செல்வம் தரும்

தனலக்ஷ்மி

பதபநிஸ் நிஸ் க்ரிஸ் |

ஸ்நிதப மகரிஸ| கமபம கரிகம|| (ஆரத்தி)


ஐஸ்வர்யங்கள் அருளிடும் அஷ்ட லக்ஷ்மி. 

பங்கய மலரில் வாழும் லக்ஷ்மி 

திசைகள் எட்டிலும் புகழ் ஓங்கிடவே-உன்

வசந்த நாமங்கள் பல இசைத்தோம் 

ஆதிலக்ஷ்மி தான்யலக்ஷ்மி தைர்யலக்ஷ்மி கஜலக்ஷ்மி

சந்தான லக்ஷ்மி 

விஜயலக்ஷ்மி

வித்யாலக்ஷ்மி

தனலக்ஷ்மி

அலைகடல் உதித்த அலைமகனே 

அனுதினம் அருள்வாய் திருமகளே..

பதபநிஸ் நிஸ்க்ரிஸ் | ஸ்நிதப மகரிஸ | கமபம கரிகம ||( ஆரத்தி)


  4. சரஸ்வதி ஆரத்தி