Thursday 7 April 2022

ஆரத்தி பாடல்.

                    ஆரத்தி பாடல்.


ஓம் ஸ்ரீஜய ஜய ஜய சக்தி

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி

ஜய ஜய என தினம்

பாடி பணிந்தோம்

ஜகமெங்கும் அமைதியை தா

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க

தேவையெல்லாம் அடைய

அம்மம்மா தேவையெல்லாம் அடைய

பக்தி பெருகிட பாடி உருகிட

பணிப்பாய் அன்பில் எமை

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


இரண்டுகள் போக மூன்றுகள் அகல

ஈஸ்வரி வரம் அருள்வாய்

அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்

கரங்குவித்தோம் இனி காலை விடோமடி

கருணையுடன் அணைப்பாய்

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


காசினில் எங்கும் வேற்றுமை போக

கருத்தினில் அன்பருள்வாய்

அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்

தேஜசுடன் வாழ காட்டடி காட்சி

தேவி உன் அடைக்கலமே

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான

நல்லொளி தீபம் வைத்து

ஞான நல்லொளி தீபம் வைத்து

நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்

ஞாலத்துக்கு அமைதியை தா

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


ஓம் கணபதி சாயி ஷண்முக நாதா

ஓம் த்ரிகுண தீதா க்ருஷ்ணா

ஓம் த்ரிகுண தீ தா க்ருஷ்ணா

ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ சம்போ

ஓம் ஜய ஜகத் ஜனனி

ஓம் ஸ்ரீ ஜய ஸத்குருதேவா

     

       2. அம்பாள் ஆரத்தி 

ஆரத்தி எடுத்து வந்தோம் தேவி உனக்கு

ஆரத்தி எடுத்து வந்தோம்.


அருளைப் பொழியும் அகிலாண்டேஸ்வரி ஆற்றலை அளிக்கும் ஆதிசக்தியே

இன்ப வாழ்வருளும் இமயவன் புத்ரி

ஈகை குணம் கொண்ட ஈஸ்வரியே- உனக்கு. (ஆர்த்தி எடுத்து வந்தோம் )


உலகினைப் படைத்த உமையவளே 

ஊண் உறக்கம் அளித்த ஊரணியே 

எங்கும் நிறைந்த பூரணியே 

ஏற்றத்தை அளிக்கும் காரணியே - உனக்கு


ஆரத்தி எடுத்து வந்தோம்.


ஐங்கரன் தாயே சங்கரியே 

ஒளிமயமான நாயகியே 

ஓம்கார ரூபி ஏகாக்ஷரியே.. உனக்கு 

ஆரத்தி எடுத்து வந்தோம்

.

        3.  அஷ்டலக்ஷ்மி ஆரத்தி


[07/10/2023, 15:04] Vasanthi: ஆனந்தபைரவி


ஆரத்தி எடுத்தே உன் பதம் பணிந்தோம்

நாரணன் மனைவியே நாராயணியே 

நான்மறை போற்றும் நாயகியே 

நானிலம் காக்கும் நறுமணியே.

 (-)


பேரின்ப வாழ்வருளும் 

ஆதிலக்ஷ்மி

பசி பிணி நீக்கும் 

தான்யலக்ஷ்மி


பவபயம் போக்கும் 

தைர்யலக்ஷ்மி 


ராஜ வாழ்வளிக்கும் 

கஜலக்ஷ்மி 

பத பநிஸ்.. நிஸ் க்ரிஸ் |

ஸ்நிதப மகரிஸ| கமபமகரிகம || (ஆரத்தி)


மழலைச் செல்வம் தரும் 

ஸந்தானலக்ஷ்மி 


எங்கும் எதிலும் வெற்றியை நல்கும் 

விஜயலக்ஷ்மி 


மேன்மை குணமருளும் 

வித்யாலக்ஷ்மி 


சகல செல்வம் தரும்

தனலக்ஷ்மி

பதபநிஸ் நிஸ் க்ரிஸ் |

ஸ்நிதப மகரிஸ| கமபம கரிகம|| (ஆரத்தி)


ஐஸ்வர்யங்கள் அருளிடும் அஷ்ட லக்ஷ்மி. 

பங்கய மலரில் வாழும் லக்ஷ்மி 

திசைகள் எட்டிலும் புகழ் ஓங்கிடவே-உன்

வசந்த நாமங்கள் பல இசைத்தோம் 

ஆதிலக்ஷ்மி தான்யலக்ஷ்மி தைர்யலக்ஷ்மி கஜலக்ஷ்மி

சந்தான லக்ஷ்மி 

விஜயலக்ஷ்மி

வித்யாலக்ஷ்மி

தனலக்ஷ்மி

அலைகடல் உதித்த அலைமகனே 

அனுதினம் அருள்வாய் திருமகளே..

பதபநிஸ் நிஸ்க்ரிஸ் | ஸ்நிதப மகரிஸ | கமபம கரிகம ||( ஆரத்தி)


  4. சரஸ்வதி ஆரத்தி



No comments:

Post a Comment