இந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்கை தொடவும்.
https://youtu.be/Y6-0zRg9m3A?si=4ZTxuTe1K_QCL7De
பல்லவி
தட்டு நிறைய பூ கொணர்ந்து பூஜிப்பேன் தேவி ஒரு கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே... ( த)
அனுபல்லவி
இஷ்டமுடன் நல்ல பூக்கள் கொணர்ந்து அஷ்டோத்திரம் செய்வேன் - ஒரு கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே.
சரணம் - 1
மல்லிகை முல்லை மருவுடன் ரோஜா மகிழம்பூ பாதிரியும் ப
அல்லி அரளியும் பச்சை வதனமும் அழகுள்ள பாரிஜாதம்
ஈஸ்வரியே ஜகதீஸ்வரியே த்ரிபுரேஸ்வரியே ராஜேஸ்வரியே (தட்டு)
சரணம் - 2
சம்பங்கி ரோஜா ஸரஸிஜ மலரால் ஸஹஸ்ரார்ச்சனை செய்வேன்
வாணி ஸரஸ்வதி வந்தென்னை ஆதரி வாசாம கோசரியே
ஸ்ரீகரியே சுபகரியே க்ருபாகரியே ப்ரபாகரியே (தட்டு)
சரணம் - 3
பக்ஷமதாகவே பரிமளப் பொடியினால் லக்ஷார்ச்சனை செய்வேன்
அக்ஷய சம்பத்தை அனுக்ரஹித்து என்னை ஆதரித்தருள்வாயே
ஏகாக்ஷரியே த்ரையாக்ஷரியே பஞ்சாக்ஷரியே ஷடாக்ஷரியே ( தட்டு)
தட்டு நிறைய பூச்சர கொணர்ந்து பூஜிப்பேன் தேவி ஒரு கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே.
இஷ்டமுடன் நல்ல பூக்கள் கொணர்ந்து அஷ்டோத்திரம் செய்வேன்
ஒரு கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே
மல்லிகை முல்லை மருவுடன் ரோஜா மகிழம்பூ பாதிரியும்
அல்லி அரளியும் பச்சைவதனமும் அழகுள்ள பாரிஜாதம்
ஈஸ்வரியே ஜகதீஸ்வரியே த்ரிபுரேஸ்வரியே ராஜேஸ்வரியே.
சம்பங்கி ரோஜா ஸரஸிஜ மலரால் ஸஹஸ்ரார்ச்சனை செய்வேன்.
வாணி சரஸ்வதி வந்தென்னை ஆதரி வாசாமகோசரியே.
ஸ்ரீகரியே சுபகரியே க்ருபாகரியே ப்ரபாகரியே
பக்ஷமதாகவே பரிமளப் பொடியினால் லக்ஷார்ச்சனை செய்வேன்.
அக்ஷய சம்பத்தை அனுக்கிரகித்து என்னை ஆதரித்தருள்வாயே.
ஏகாக்ஷரியே த்ரயாக்ஷரியே பஞ்சாக்ஷரியே ஷடாக்ஷரியே
No comments:
Post a Comment