காரடையான் நோன்பு.14..3.2020
சத்தியவான் அவரது மனைவி சாவித்திரி இருவரும் மனமொத்த தம்பதியாக வாழ்ந்தனர். சாவித்ரி நித்யம் "கௌரி பூஜை" செய்து தன் கணவன் மற்றும் தன் மாமன் மாமியையும் வணங்கி, அன்போடு பணிவிடை செய்து கவனித்து இல்லற தர்மத்தை கடைபிடித்தாள்.
ஆயினும் சத்தியவானின் ஆயுட்காலம் குறுகிய காலத்திலேயே முடிவுற்றதால், எமதர்ம ராஜன் அவன் உயிரைக் கவர்ந்து சென்றார்.
மஹாபதிவ்ரதையானதால் சாவித்ரியின் கண்களுக்கு எமராஜன் தென்படவும், நடக்கும் நிகழ்வினை புரிந்து கொண்டு, எமதர்மனிடன் தன் கணவனுக்கு உயிர் பிச்சை அளிக்கும்படி, எமராஜனை பின் தொடர்ந்து சென்றாள்.
தன்னை பின் தொடர்ந்து ஒரு பெண் வருவதை அறிந்து, எமராஜன் திரும்பிப் பார்க்கவும், உடனே அவர் கால்களில் பணிந்து வணங்கினாள். எமதர்மனும் '"தீர்க்க சுமங்கலி பவ" என வாழ்த்தினார்.
என் கணவரின் ஆயுட்காலம் முடிவுற்றதால் அவர் உயிரை பறித்துவிட்டு, என்னை தீர்க்க சுமங்கலியாக வாழ்த்தும் தங்கள் வாக்கு பொய்க்கலாமா? என வாதிட்டு, தன் ஆயுட்காலத்தில் பாதியை தன் கணவருக்கு அளிக்கும்படி வேண்டி, தன் கணவரை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டு வந்தாள்.
{இதன் காரணமாகவே, பெரியவர்களைக் கண்டதும் நாம் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கவேண்டும். அவர்களின் ஆசி மொழி நம் தீவினை எல்லாவற்றிற்கும் அருமருந்தாகும்.}
இதையே பங்குனி மாதப் பிறப்பன்று "காரடையான் நோன்பு" என திருமணமான பெண்கள், ஒருக்காலும் என் கணவர் எனைப் பிரியாது இருக்கவேண்டும் எனவும், கன்னிப் பெண்கள் சத்தியவானைப் போல் நல்ல குணவான் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்றும் மஞ்சள் சரடினை கட்டிக் கொண்டு நோன்பு இருப்பர்.
சனிக்கிழமை மார்ச் 14 2020 அன்று பங்குனி முதல் நாள் காலை 10.45 முதல் 12 மணிக்குள்
நோன்பு நூற்க வேண்டும்.
No comments:
Post a Comment