Tuesday, 10 December 2024

எறிபத்த நாயனார்.

 வருகிற செவ்வாயன்று  [2.3.2021]எறிபத்த நாயனார் 'குரு பூஜை". கருவூரிலே மாசி ஹஸ்த நக்ஷத்திரத்தில் அவதரித்த எறிபத்த நாயனார் சிவனடியார்களுக்கு திருத் தொண்டு புரிவதில் மிகுந்த வருகிற செவ்வாயன்று  [2.3.2021]எறிபத்த நாயனார் 'குரு பூஜை". கருவூரிலே மாசி ஹஸ்த நக்ஷத்திரத்தில் அவதரித்த எறிபத்த நாயனார் சிவனடியார்களுக்கு திருத் தொண்டு புரிவதில் மிகுந்த ஈடுபாடுடையவர்.. இவர் தன் கையில் எப்பொழுதும் 'மழு' எனும் ஆயுதம் தாங்கியிருப்பார். ஏனெனில், இப்பெருமானார் சிவனடியாரகளுக்கு யாரெனும் தீங்கு நினைப்பாராயின் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார்.

     ஒரு சமயம் கருவூரிலேயே வசித்து வந்த முதுபெரும் சிவதொண்டரான சிவகாமியாண்டார் என்பவர் அதிகாலையில், வருகிற செவ்வாயன்று  [2.3.2021]எறிபத்த நாயனார் 'குரு பூஜை". கருவூரிலே மாசி ஹஸ்த நக்ஷத்திரத்தில் அவதரித்த எறிபத்த நாயனார் சிவனடியார்களுக்கு திருத் தொண்டு புரிவதில் மிகுந்த ஈடுபாடுடையவர்.. இவர் தன் கையில் எப்பொழுதும் 'மழு' எனும் ஆயுதம் தாங்கியிருப்பார். ஏனெனில், இப்பெருமானார் சிவனடியாரகளுக்கு யாரெனும் தீங்கு நினைப்பாராயின் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார்.

     ஒரு சமயம் கருவூரிலேயே வசித்து வந்த முதுபெரும் சிவதொண்டரான சிவகாமியாண்டார் என்பவர் அதிகாலையில், திருக்கோயில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்காக புத்தம்புது மலரினைப் பறிப்பதற்கு முன், தன் வாயிலிருந்து உமிழ்நீர்த் துளிகள் எதுவும் அப்பூக்களில் சிந்தி அதன் தூய்மை கெடாவண்ணம் துணியால் தன் வாயினைக் கட்டிக் கொள்வார்.  பின் வாசம் நிறைந்த மலர்களை அழகிய மாலையாகத் தொடுத்து, தள்ளாடித் தள்ளாடி கோயிலுக்கு சென்று சிவபிரானின் திருப்பள்ளியெழுச்சிக்கு  முன் சேர்ப்பிப்பதை நித்ய வழக்கமாகக் கொண்டிருந்தார். வீற்றிருக்கும் சிவபெருமானுக்காக புத்தம்புது மலரினைப் பறிப்பதற்கு முன், தன் வாயிலிருந்து உமிழ்நீர்த் துளிகள் எதுவும் அப்பூக்களில் சிந்தி அதன் தூய்மை கெடாவண்ணம் துணியால் தன் வாயினைக் கட்டிக் கொள்வார்.  பின் வாசம் நிறைந்த மலர்களை அழகிய மாலையாகத் தொடுத்து, தள்ளாடித் தள்ளாடி கோயிலுக்கு சென்று சிவபிரானின் திருப்பள்ளியெழுச்சிக்கு  முன் சேர்ப்பிப்பதை நித்ய வழக்கமாகக் கொண்டிருந்தார்... இவர் தன் கையில் எப்பொழுதும் 'மழு' எனும் ஆயுதம் தாங்கியிருப்பார். ஏனெனில், இப்பெருமானார் சிவனடியாரகளுக்கு யாரெனும் தீங்கு நினைப்பாராயின் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார்.





  அச்சமயம் அந்நகரை ஆண்ட 'புகழ்ச்சோழ நாயனாருடைய' பட்டத்து யானையானது, மஹாநவமி நாளன்று காவிரியில் குளித்து, பாகர்கள் ஐவர் யானை மேல் இருவர், அதை கட்டுக்குள் வைத்து வழிநடத்தும் விதமாக முன்பாக ஒருவரும் பக்கவாட்டில் இருவருமாக எனபுடை சூழ வெகுவேகமாக அரண்மனைக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தது. 
    அப்பொழுது,தனக்கு முன்பாக வயது முதிர்நிலையில் தள்ளாட்டமும் வேகமாக தலையில் பூக்கூடையுடன் விரைந்து சென்று கொண்டிருந்த சிவகாமியாண்டாரிடமிருந்து பூக்கூடையை தன் துதிக்கையினால் பறித்து விசிறி தரையில் எறிந்து, தன் வழியே சென்றது. பாகர்களும், இதைப் பொருட்படுத்தாமல், விரைந்தனர். 
  இதைக் கண்டு மனம் பதறி, யானையைத் துரத்திச் செல்லவும், இயலாதவராய், கோபமும், வருத்தமும் இயலாமையும் ஒன்றுசேர, "தேவரீருக்குச் சாத்தும் படியான பூக்கள் இப்படி யானையால் சிந்தியதே" என ஓலமிட்டு அழுதார். 
 அச்சமயம் அங்கு வந்த எறிபத்தர், விவரம் அறிந்து யானை சென்ற திசை நோக்கிச் சென்று, யானையையும், ஒன்றுக்கு ஐந்து பாகர்கள் இருந்தும்,அதை சரிவர கட்டுப்படுத்தத் தவறிய சிவத்தொண்டுக்கு இடையூறு விளைவித்த அவர்களது அலட்சியத்துக்கு தண்டனையாக, தன் மழு ஆயுதத்தால் யானையின் துதிக்கையை துண்டித்தும், பாகர்களது உயிரையும் கொய்தார்.
     தன் யானையும், பாகர்களும் கொல்லப்பட்ட சேதி கேட்டு இது எதிரி நாட்டு மன்னனின் வேலையாக இருக்கும் என்றெண்ணி, தன் படைகளுடன் அவ்விடத்திற்கு வந்தான். 
  கோபத்துடன் மழு தாங்கி ஏறு போல் நின்றிருக்கும், எறிபத்தரைக் கண்டு, இப்பேர்ப்பட்ட சிவனடியார், இவரா!  இத்தகு வேலையைச் செய்திருப்பார் எனின்,  சிவ அபராதம் காரணமாகவே இவ்விதம் நிகழ்ந்திருக்கும் என்று ஊகித்து, 
''பட்டத்து யானையும் அதன் பாகர்களையும் சரியானபடி நிர்வகிக்காத அரசனான தானே முதல் குற்றவாளி. தானே சிவ அபராதி. ஆகையால், தாங்கள் என்னையும் தண்டித்து இந்த அபராதத்திலிருந்து என்னைக் காப்பாற்றவேண்டும். தங்களது மங்கலப் பொருளான, மழுவால் தீண்டுவதற்குக் கூட தான் அருகதையற்றவனானேன். எனவே எனது வாள் கொண்டு என்னைத் தண்டியுங்கள்'' என்று மண்டியிட்டு வேண்டினான். 
  மன்னனது, சிவபக்தியைக் கண்டு , தான் அவசரப்பட்டு விட்டோமோ? என்று  மனம் வருந்தி, அவரிடமிருந்து உடைவாளை வாங்கி, தன் கழுத்தை தானே அறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முனைந்தார் எறிபத்தர். அதுகண்டு மனம் பத்றி மன்னன் அவரை தடுத்து நிறுத்த, அப்பொழுது விண்ணிலிருந்து அசரீரி வாக்கு ஒலித்தது. 
    தங்கள் அனைவரது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டவே, இப்படியொரு திருவிளையாடலைப் புரிந்தோம். என்றதோடு, சிவகாமியாண்டாரின் பூக்கூடையில் திரும்பவும் பூக்கள் தூய்மையானதாக வந்து நிரம்பின.  இறந்த யானை மற்றும் பாகர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.
       எறிபத்த நாயனாரும் மன்னனிடம் அன்பு கொண்டு தாங்கள் யானை மீதேறிச் சென்று என்னை மகிழ்வுறச்செய்யுங்கள் என்றார். மன்னனும் எறிபத்தரை பாதங்களில் விழந்து வணங்கி, தன் பரிவாரங்களுடன் அரண்மனை திரும்பினான். 
    எறிபத்தரும் அடுத்து வந்த காலங்களில் பல சிவ தொண்டுகள் புரிந்து, சிவ கணங்களுள் ஐக்கியமானார்.
image.png


இத்திரு நாளில் இந்த நிகழ்வை நினைவு கொண்டு உலகுக்கு இறை கருணையை உணர்த்தும்விதமாக சாங்கோபாங்கமாக நிகழ்த்தி  மகிழ்வர்.



 

No comments:

Post a Comment