Thursday 30 November 2023

பங்குனி உத்திரம்.

 


ஹோலி பண்டிகைக்கு பல நிகழ்வுகள் கதைகள் கூறப்பட்டாலும், காமனின் தகனம் அதனைத் தொடர்ந்த பங்குனி உத்திரமும் அதி முக்கியம் வாய்ந்தது.

பர்வத ராஜனின் மகளாக பார்வதி எனும் நாமத்துடன் உமாதேவி சிவபெருமானைப் பிரிந்திருக்க, இவர்கள் ஒன்று சேர்வதன் மூலம் முருகப் பெருமான் பிறந்து அதன் பின் "சூரபத்மனை" வதம் செய்யவேண்டும். இதற்காக தேவேந்திரன் மன்மதனிடம் அவ்வேளையை ஒப்படைக்க, அவன் சிவனின் நெற்றிக்கண்ணால் எரிந்து சாம்பலானான். அப்பொழுது அம்பிகையே மன்மதனின் வில்லையும் அம்பையும்  ஏந்தி உலக நன்மைக்காக 'காமாக்ஷி'யாக இறைவனை தன் வசப்படுத்தினாள். அத்துடன் மன்மதனையும் அருள் கூர்ந்து உயிர் பெறச் செய்தாள்.
               அதன் பின் வந்த, பங்குனி உத்திரத் திரு நாளில் எம்பெருமான் உமாதேவியை மணந்தார். இக்கல்யாண உற்சவத்தை அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடுவர். அம்மையப்பனுக்கும் புது ஆடை ஆபரணங்கள் அணிவித்து, வேத மந்திர கோஷத்துடன் ஹோமம் வளர்த்து,பின் திருமாங்கல்யம் அணிவித்து  திருமணம் நடத்தி பின் பல்லக்கில் அம்மையப்பனாக அனைவருக்கும் அருள் மழை பொழிய 'வீதி உலா' வந்து, பின் 'பள்ளியறைக்கு' எழுந்தருள்வார்கள்.
       இதே பங்குனி உத்திரத்தில் தான் திருமுருகனும் 'தேவசேனாதிபதியாக ' சூரபத்மனை வதம் செய்து,  அதற்கு பரிசாக  இந்திரனின் மகளான 'தெய்வானையை  மணம் புரிந்தார்.அதனால் இந்த பங்குனி உத்திரம் முருகனுக்கும் விசேஷம் வாய்ந்தது.  
                 அதனால் பார்வதி பரமேஸ்வரன் மற்றும் திருமுருகன் கல்யாண உற்சவத்தில் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் மற்றும் ஆண்கள் வேண்டிக் கொண்டு கல்யாண விரதம் இருந்து  உற்சவத்தில் கலந்து கொண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகம். 
  வருகிற மார்ச் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 'பங்குனி உத்திரத் திரு நாள்' ஆகும்.

திருக்கச்சி நம்பிகள் ஆராதனை.

 



வைசிய குலத்தில் பிறந்த செல்வந்தரான கஜேந்திர தாசர் தன் சொத்துக்கள் முழுவதையும் காஞ்சி வரதனுக்காகவே அர்ப்பணித்தார். பூவிருந்தவல்லியில் தன் சொந்த நிலத்தில் நந்தவனம் அமைத்து, தன் கையாலேயே மலர் மாலைகள் வரதனுக்காக தொடுத்து காஞ்சி வரை நடந்தே சென்று அர்ப்பணித்து மகிழ்ந்தார். காஞ்சி வரதனும் இவர் பக்தியில் மகிழ்ந்து தினமும் இவருடன் நேரில் வந்து பேசி மகிழ்வார். இவர் ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதிக்கும் சென்று சேவை செய்வதற்காக செல்ல ரங்கநாதனும் ஏழுமலையானும் காஞ்சி வரதன் உன் பிரிவால் வாடுகிறான். ஆகையால் நீ அங்கு சென்று வரதனுக்கு கைங்கர்யம் செய் என்று அனுப்பி வைத்தார்களாம். அன்று முதல் இவர் "திருக்கச்சி நம்பிகள்" என போற்றப்பட்டார்.அப்பேர்ப்பட்ட உன்னதமான பக்தி கொண்ட இவரது ஆராதனை அவர்தம் அவதார தினமான மாசி மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தன்று பூவிருந்தவல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் வெகு விமரிசையாக 10 நாட்கள் ப்ரம்மோற்சவமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

Monday 27 November 2023

சுபமுகூர்த்தம்

 பொதுவாக நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விற்கும் நல்ல நேரம் பார்த்து, அந்த வேலையைச் செய்ய விரும்புவோம் அல்லவா? அப்படிப்பட்ட அந்த நேரத்தை முஹுர்த்த நேரம் என்பர். 



வேதத்தில் இதற்கான விளக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.  


      பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை 'அஹோராத்ரம்' என்கிறது வேதம். ஒரு நாளில் காலை 6 மணி தொடங்கி 24 மணி நேரத்தை 30 சம பாகங்களாகப் பிரித்து 30 வகையான முஹூர்த்த காலங்களாகக் கணக்கிடப்படுகிறது


 இரண்டு நாழிகைக் காலம் [48 நிமிடங்கள்] ஒரு முஹூர்த்தம் ஆகும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். அந்த வகையில் காலை 6 மணி முதல் 6:48 மணிவரையிலான காலம் 'ருத்ர முகூர்த்தம் எனப்படும். இப்படியாக அடுத்தடுத்த 48 நிமிடங்களாகக் கணக்கிட்டு முறையே, ஆஹி,மித்ர, பித்ரு, வசு இன்னபிற முகூர்த்தங்களோடு 29 வது முகூர்த்தமாக அதிகாலை 4:24 முதல் 5:12 மணி வரை 'பிரம்ம முகூர்த்தம்' அடுத்து கடைசி  முகூர்த்தமாக 5: 12 முதல் 6 மணி வரை 'சமுத்ரம் முகூர்த்தம்' என 30 முகூர்த்தக் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன



சூரியன் உதயமாகும் காலம்  உச்சிக் காலம் மற்றும் சூரியன் மறையும் அந்திப் பொழுது என இக்காலங்கள் திதி, நக்ஷத்திரம் , கிழமை என எந்த தோஷங்களும் இல்லாத புண்ணிய முகூர்த்த காலஙளாக போற்றப்படுகிறது. 


சூரியன் உச்சிப் பொழுதை அடையும் நேரமான 11.45 முதல் 12:15 வரையிலான காலம் 'அபிஜித் முகூர்த்த காலம்" எனப்படுகிறது. ஏனெனில் சூரியம் உச்சமடைந்து பிரகாசிக்கும் பொழுது நமது காரியங்களும் வெற்றியடைந்து நம் வாழ்வும் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.



மைத்ர முகூர்த்த காலத்தில் நம் கடன்களை அடைக்க முற்பட்டால், அப்போதைய கடன் ப்ரச்னை சுமுகமாவதோடு எந்தவிதமான கடன் பிரச்னையும் இனி நேராமலும் காக்கும் என்பதும் நம்பிக்கை. இந்த காலமே சிவனும் விஷ்ணுவும் இணைந்த கோலமான சரபேஸ்வரரை நினைத்து வழிபடுவது  கடன் தொல்லையிலிருந்து நிரந்தரத் தீர்வு பெறுதற்குரிய நலமானது என ஜோதிடமும் வலியுறுத்துகிறது.  


 இதில் 26 ஆவது ஜீவ அம்ருத முஹூர்த்தமும், 29 ஆவது பிரும்ம முகூர்த்தமும் இறைவழிபாட்டிற்க்கும்  திருமணம் போன்ற சுப நிகழ்விற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. அதிலும் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் அனைத்து விதமான காரியங்களுக்கும் சிறப்பிக்கப்படுகிறது. 


இந்த பிரம்ம முகூர்த்தத்தில் சரஸ்வதி தேவியும் தம் நாதனான பிரம்மனை துதித்து வழிபடுவதாகவும் அதனால் நாம் அந்த சமயம் செய்யும் இறை வழிபாட்டில் பலவித நன்மைகள் வாழ்வில் மலரும் என்பதும் உண்மை.


 அத்துடன் சிவபிரான் பிரம்ம தேவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி புது உலகை படைக்க உததரவிட,  அவ்வண்ணமே சிவபிரானை அந்த  நேரத்தில் துதித்து வணங்கி தன் படைத்தல் தொழிலை துவங்கினார். அதன் காரணமாக அவர் பெயராலேயே அந்த புண்ய காலம் 'பிரம்ம முகூர்த்தம் ' காலம் என அழைக்கப்படலாயிற்று.






நல்ல உள்ளம் வாழும் வாழ வைக்கும்.

 ஒரு சிறிய கிராமத்தில்  பரம சாதுவான ஒரு பெரியவர் வசித்து வந்தார். பெருத்த குடும்பம், சிறுத்த வருமானம்.ஆம்! அவரிடம் கல்விச் செல்வமும், குழந்தைச்  செல்வங்களும் இருந்த அளவு, பொருள் செல்வம் இல்லை. 


 நிலையான வருமானம் இல்லாததால் பசியும்  பட்டினியுமாக   அவரும் அவரது மனைவி மக்களும் வறுமையில் வாடினர்.  எப்படி முயன்றும் சரியான வேலை கிடைக்காத காரணத்தால் தான் முதலில் அயலூருக்குச் சென்று நல்லதொரு வேலை தேடிய பின், மனைவி மக்களை அழைத்துச் செல்வதாகக் கூறி புறப்பட்டார்.


    வழியில் காட்டுப் பாதை வழியாகத் தான் அடுத்த ஊருக்குச் செல்லமுடியும். நடந்து நடந்து ஒரு வழியாக காட்டுப் பாதையையும் அடைந்தார்.  


வெகு தூரம் நடந்து வந்த களைப்பு மிகுதியால், பசியும்   அதைவிட  நா வறண்டு  தாகமும்  மேலிட,  அருகில் குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் எதுவும் தென்படுகிறதா? என தேடினார்.


அப்பொழுது, அங்கே, கிணறு ஒன்றை கண்டார். அப்பாடா ! என்று ஆவலோடு கிணற்றை மெதுவாக எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஆம்! அது ஒரு பாழும் கிணறு. அதில், புலி, குரங்கு மற்றும் மலைப்பாம்புடன் ஒரு மனிதனும்  இருப்பதைக் கண்டார் .அவசரத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்று ஊகித்து அறிந்தார்.


   அப்பொழுது புலி அவரைப் பார்த்து, ஐயா! தங்களைப்   பார்த்தால் மிகவும் கருணை கொண்டவராகத் தெரிகிறீர். என்னை இக்கிணற்றிலிருந்து காப்பாற்றினால், நன்றி உடையவனாக இருப்பேன் என்றது.


உடன் ஏழைப் பெரியவரும், நான் உன்னைக் காப்பாற்றிய பின், நீ என்னையே அடித்து உண்ணமாட்டாய் என்பது என்ன நிச்சயம் என்றார்.


ஐயா! நாங்கள் பசி எடுக்கும் பொழுது மட்டுமே பிற உயிர்களை அடித்து உண்போம். மனிதர்களைப் போல  தேவையின்றி பிறரை துன்புறுத்தமாட்டோம். என்றது.


அவரும் புலியின் கூற்றின் உண்மையை உணர்ந்து, புலியை காப்பாற்றினார்.


புலியும் அவருக்கு பலவாறு தன் நன்றியைக் கூறி  அதோ தெரியும் மலையின் அடிவாரத்தில் தான் தனது குகை உள்ளது எனவும், தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், தன் குகைக்கு வருகை தந்து தன்னை கௌரவிக்க வேண்டுமென அன்புடன் கூறியதோடு, யாருக்கு வேண்டுமானாலும் உபகாரம் செய்யுங்கள். ஆனால் அந்த மனித்னை மட்டும் நம்பாதீர்கள். அவன் நயவஞ்சகம் கொண்டவன் என எச்சரித்து விடை பெற்றுச் சென்றது.  


   அவ்வண்ணமே ! மலைப்பாம்பும் தன்னையும் காப்பாற்ற வேண்டியதும் அவர் தயங்கவே அவரது பயத்தை உணர்ந்து, தங்களுக்கு தக்க சமயத்தில் நான் உதவி புரிவேன் என சத்தியம் செய்தது. அவரும் தைரியம் வரப் பெற்றவராய், அதன்படியே காப்பாற்றவும், மலைப்பாம்பும் அவருக்கு நன்றி கூறி, அவர் தன்னை எப்பொழுது நினைத்தாலும் அவர் முன் தோன்றுவேன் என வாக்களித்து புலியைப் போலவே மனிதனைப் பற்றி எச்சரித்துச் சென்றது. 


அடுத்து, குரங்கும் அவரை கெஞ்சலுடன் நோக்கவே, குரங்கினால் எந்த ஆபத்தும் நேராது .அது சாதுவான பிராணி என்று எண்ணி, அதையும் காப்பாற்றினார். குரங்கும் அவருக்கு நன்றிகள் பல கூறி அருகில் இருக்கும் தோப்பில் தான் நான் வாசம் செய்கிறேன். சமயம் கிடைக்கும் பொழுது அவர் அங்கு வரவேண்டும் என்றதோடு, மற்ற இரண்டையும் போலவே, அம்மனிதனிடம் நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்திச் சென்றது.


அப்பொழுது, போயும் போயும் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் சொல்வதை நம்புவாய்! மனிதனுக்கு மனிதன் நம்ப மாட்டாயா? எனக் கூறி அவரிடம் தன்னையும் காப்பாற்ற வேண்டினான் அந்த மனிதன். 


 அவன் மேல் இரக்கம் கொண்டு அவனையும் காப்பற்றினார். அந்த மனிதனும்,  பக்கத்து நகரில் தான் தனது இல்லம் இருப்பதாகவும், தான் ஒரு பொற்கொல்லன் எனவும் கூறி, தன் இல்லக் கதவு அவருக்காக எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்றும் பலவாறாய் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றான்.


      அதன்பின், அந்த ஏழைப் பெரியவரும், ஒருவாறாக, பக்கத்து ஊரை அடைந்து, நல்லதொரு வேலைக்காக அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனில்லாமல் போகவே, தனியே இங்கு இருந்து துன்பப்படுவதைக் காட்டிலும் ஊருக்கே திரும்புதல் நலம் என எண்ணி, வந்த வழியே கிளம்பலானார்.


  மனச் சோர்வும், வாழ்க்கைமேல் அவநம்பிக்கையும் நீண்ட தூரம் நடந்த களைப்பும் ஒன்றுக்கொன்று மனதை பிசைய உடல் தளர்ந்து ஒரு மரத்தடியில் மயங்கி விழுந்தார்.


  அந்த மரத்தில் தான், முன்பு அவர் காப்பாற்றிய குரங்கு வசித்து வந்தது. தூரத்தில் அவர் வரும் போதே கண்டு கொண்ட குரங்கு, தனக்குதவி செய்தவருக்கு தான் பிரதி உபகாரம் செய்யும் சந்தர்ப்பம் வந்தது என்று மகிழ்ந்து, அவர் அருகில் வந்ததும் எதிர் கொண்டழைக்கக் காத்திருந்தது. ஆனால், அவர் மயங்கி விழவும், மிகவும் பதறி மரத்திலிருந்து சரசரவென இறங்கி, மயக்கம் தெளிவித்து  அவர் பசியுடன் இருப்பதை உணர்ந்து, பலவித சுவை மிகுந்த பழங்களை எடுத்து வந்து அவருக்கு அளித்து உபசரித்தது. 


    அப்பழங்களை உண்டதும்,சோர்வு நீங்கி புத்துணர்வு பெற்றவரானார். உடன் அருகில் மலையடிவாரத்தில் தான் தன் குகை என புலி கூறியது நினைவில் வரவே, சரி! வந்தது தான் வந்தோம். புலியையும் பார்த்து விட்டுச் செல்லலாம் என எண்ணியவாறு குரங்கிடம் நன்றி கூறி விடைபெற்று, புலியின் குகைக்குச் சென்றார். 


   அவரைக் கண்டதும் புலி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தது. அவரை உபசரித்து பின் அவர் கிளம்பும் சமயம், அவரை அன்புடன் நோக்கி, முன்பொரு முறை, பக்கத்து நாட்டு இளவரசன் என்னை வேட்டையாட வந்தான். அவனிடமிருந்து என்னை காத்துக் கொள்ள வேண்டியதால், நான் அவனைக் கொல்லும்படி நேர்ந்தது.   .


 அவனது விலையுயர்ந்த ஆபரணங்களையெல்லாம் நான் தாங்கள் இங்கு வரும் பொழுது உங்களுக்கு நன்றிக் கடனாக என் அன்பளிப்பாக கொடுக்கலாம் என்று அவனிடமிருந்து கழற்றி எடுத்து வந்தேன் என்று கூறி அவருக்கு பரிசளித்தது. 


ஆனால், பெரியவர் அதை வாங்க மறுத்தார்..புலியோ மிகவும் வற்புறுத்தியது. தனக்கு இந்த நகைகளால் எந்த உபயோகமும்   இல்லை. இவை அவரது வறுமையைப் போக்க உதவும் என்று அவரை வேண்டிக் கெஞ்சியது.


புலியின் வேண்டுதலை தட்ட இயலாமல்,   பெரியவரும்    நகைகளை பெற்றுக் கொண்டாலும் இதனால் ஏதும் ப்ரச்சினை வருமோ? என உள்ளூர பயந்தார். 


   பின், புலியிடம் விடைபெற்றுச் செல்லும்போது, தான் காப்பாற்றிய அந்த பொற்கொல்லன் நினைவு அவருக்கு வந்தது.  நகைகளாக வைத்துக் கொண்டிருந்தால் பிரச்சனையும் ஆபத்தும் வரலாம். அதனால், அவனிடம் இந்த நகைகளை நல்ல விலைக்கு விற்றுக் கொடுக்கச் சொல்லலாம். இனி நம் கஷ்டமும் தீரும் என்ற நினைப்பு உவகை தர, பொற்கொல்லனது இல்லம் நாடிச் சென்றார்.


 இவரைக் கண்டதும் பொற்கொல்லன் அகமும், முகமும் மலர வரவேற்று உபசரித்தான். பின், பெரியவர் நடந்தவற்றை எல்லாம் அவனிடத்தில் விளக்கிக் கூறி, அந்த நகைகளை விற்றுத் தந்தால் தமது வறுமை நீங்கும் என அவனிடம் உதவும் படி கேட்டுக் கொண்டார்.


 பொற்கொல்லனும் அவருக்கு உதவுவது தனது பேறு எனக் கூறி, அவரிடமிருந்து அந்த நகைகளை வாங்கிப் பார்த்தவன் திடுக்கிட்டான்.


ஆஹா! இது  தங்கள் நாட்டு இளவரசனுக்காக என்னால் செய்யப்பட்ட   நகையாயிற்றே! வேட்டையாடச் சென்றவனை காணவில்லை என தேடிச் சென்ற வீரர்கள் இறந்து கிடந்த அவன் உடலைத் தான் எடுத்து வந்தனர். இளவரசன் அணிந்திருந்த நகைகளும் அவன் உடம்பில் காணப் பெறாததால், ஏதோ கொள்ளையர்கள் தான் அவனைக் கொன்று நகையை களவாடிச் சென்றதாக அனைவரும்  நினைத்திருந்தனர். அதனால் அரசனும், கொள்ளையர்களை கண்டுபிடித்து  தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தான்.  


        இப்பொழுது பொற்கொல்லனுக்கு  விஷயம் விளங்கியது. ஆனால், அவன் மனதில் ஒரு திட்டம் உருவாகியது. உடனே, அவன் பெரியவரிடம், தாங்கள் என் வீட்டிலேயே  காத்திருங்கள். இது மிகவும் தரம் வாய்ந்த நகைகளாக உள்ளதால், இதை வாங்கும் திறன் அரசனுக்கே உள்ளது. நான் அரண்மனை பொற்கொல்லன் ஆனதால், நான் அரசனிடம் சென்று இதை காண்பித்து, தக்க பொற்காசுகளை வாங்கி வருகிறேன் என்றான். பெரியவரும் மகிழ்ந்து, அதற்கு இசைந்தார். 


       ஆனால், பொற்கொல்லன் வஞ்சக எண்ணத்துடன், அரசனிடம் சன்மானம் பெறும் ஆதாயத்துடன், அரசனிடம் சென்று,


அரசே! இளவரசரது நகைகளைக் களவாடிய கொடியவனை என் இல்லத்தில் பிடித்து வைத்திருக்கிறேன் என்று உண்மையை மறைத்து பொய்யுரை கூறி, பரிசுத் தொகையை வாங்கிக் கொண்டு, காவலர்களுடன், தன் இல்லத்திற்கு வந்து, பெரியவரை பிடித்துக் கொடுத்தான்.


 அரசனும் மகனை இழந்த பெருந்துயரம் காரணத்தால், உண்மையை ஆராயாது, விசாரணை ஏதுமின்றி, அப்பெரியவரை சந்திக்கக்கூட இல்லாமல், அவரை சிறையில் அடைத்து மறுநாள் அவருக்கு மரணதண்டனையும் விதித்தான்.


 பெரியவர் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள், சிறையில் அடைக்கப்பட்டார். தான் யாருக்கும் மனதால்   கூட    கெடுதல்  நினைத்ததில்லையே. அத்துடன் தன் நிலை, தான் பயந்தது போலவே ஆகியதே என மனம் நொந்தார். இனி தன்னை காப்பாற்றுவார் யார் உளர்? விவரம் ஏதும் அறியாமல் தன் குடும்பம் வேறு தத்தளிக்குமே என    பலவாறாக எண்ணி அவர் மனம் வருந்தினார். 


  திக்கற்றவனுக்கு தெய்வமே துணை! கடவுளே நான் எப்படி இந்த பழி பாவத்திலிருந்து மீளுவேன் என கதறிய வேளையில், அவருக்கு  தன்னை நினைத்த மாத்திரத்தில் அவர் முன்னே தோன்றுவேன் எனக் கூறிய மலைப்பாம்பின் நினைவு வந்தது. 


அவ்வாறே, அவருக்கு வாக்களித்த வண்ணம், அவர் தன்னை நினைத்தவுடன் அவர் முன் தோன்றிய மலைப்பாம்பு, நடந்தவற்றை எல்லாம் அறிந்து, அவருக்கு தைரியம் அளித்து, பின் ஒரு யோசனையும் கூறியது.


கவலைப்படாதீர் பெரியவரே! தங்களுக்கு உதவ இது அந்த தெய்வமே எனக்கு அளித்த வாய்ப்பாக கருதுகிறேன். நான் இந்த நாட்டு அரசியை கடித்து விடுகிறேன். அரண்மனை வைத்தியர்களாலும் குணப்படுத்த இயலாமல் கை விரித்து விடுவர். அது சமயம், நீங்கள், அரசியை என்னால் காப்பாற்ற இயலும் என்ற தகவலை மன்னருக்குத் தெரியப்படுத்த, அவரும் வேறு வழியின்றி உங்களை அனுமதிப்பார். நீங்களும் அரசிக்கு வைத்தியம் செய்வதுபோல் நாடி பிடித்துப் பார்க்கும் பொழுது, யாரும் அறியாமல் நான் வந்து அரசியின் உடம்பில் பரவிய விஷத்தை உறிஞ்சி எடுத்து விடுகிறேன். அரசியும் உயிர் பிழைப்பாள். அரசனும் மகிழ்ந்து உங்களை விடுதலை செய்து விடுவான் என்ற மலைப்பாம்பின் திட்டப்படியே அனைத்தும் செம்மையாக நடந்தேற, அரசனும் அவரை பலவிதமாக பாராட்டி நன்றி கூறினார்.


   பின் தங்களைப் பார்த்தால் கள்ளங்கபடமற்றவர் போல் தெரிகிறதே. தாங்கள் நிச்சயமாக என் மகனை கொன்றிருக்க முடியாது. என்ன நடந்தது? எதையும் மறைக்காமல் கூறுங்கள் என்று அன்போடு கேட்டார்.


பெரியவரும், உள்ளது உள்ளபடி அனைத்தையும் கூற, வெகுண்ட மன்னன், அந்த நம்பிக்கை துரோகியான பொற்கொல்லனை நிரந்தரமாக சிறையிலடையுங்கள் என கட்டளையிட்டான்.


 பின், அந்த பெரியவரை தனது முதன் மந்திரியாக நியமித்து, ஏராளமான பொன்னும், பொருளும் இன்னபிற பரிசுகளையும் அளித்து கவுரவித்தான்.


பின்னர், அந்த பெரியவரும் தன் குடும்பத்தையும் அந்நாட்டிற்கு   வரவழைத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.



दक्षिणामूर्ति स्तोत्रम् தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்.


 मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं

वर्षिष्ठांते वसद् ऋषिगणैः आवृतं ब्रह्मनिष्ठैः ।

आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं

स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे ॥१॥


वटविटपिसमीपेभूमिभागे निषण्णं

सकलमुनिजनानां ज्ञानदातारमारात् ।

त्रिभुवनगुरुमीशं दक्षिणामूर्तिदेवं

जननमरणदुःखच्छेद दक्षं नमामि ॥२॥

चित्रं वटत्रोमूले वृद्धाः 

शिष्या गुरुर्युवा । गुरोस्तु मौनं व्याख्यानं

 शिष्यास्तुच्छिन्नसंशयः ॥3॥ 


निधये सर्वविद्यानां भिषजे भरोगिनाम् । गुरुवे सर्वलोकानां दक्षिणामूर्तये नमः ॥4

ॐ नमः प्रणवार्थाय शुद्धज्ञानैकमूर्तये । निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये नमः ॥5॥

चिघ्नयाय महेशाय वत्मूलनिवासिने । सच्चिदानन्दरूपाय दक्षिणामूर्तये नमः ॥6॥

ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने । व्योमवद् व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः 7॥

स्तोत्रम् विश्वं दर्पणदर्शनमानगर्यतुल्यं निजन्तर्गतं पश्यन्नात्मनि माया बहिरिवोद्भूतं यथा निद्रया । यः साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवद्वयं तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥॥

यः साक्षात्-कुरुते प्रबोध-समये स्व- [ए] आत्मानं-एव-अद्वयं

तस्मै श्री-गुरु-मूर्तये नाम इदं श्री-दक्षिणामूर्तये ||1||

बीजस्याऽन्तरिवाङ्कुरो जगदिदं प्राङ्गनिर्विकल्पं पुनः मायाकल्पितदेशकालकलना वैचित्र्यचित्रीकृतम् । मायावीव विजृंभयत्यपि महायोगीव यः स्वेच्छया तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥2॥

यस्यैव स्फुरं सदात्मकमसत्कल्पार्थकं भासते साक्षात्तत्त्वमसीति वेदवचसा यो बोधयत्याश्रितान् । यत्ससात्करणाद्भवेन्न चार्जर्भवाम्भोनिधौ तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥3॥


नानाच्छिद्रघटोदर्शितमहादीपप्रभा भास्वरं

ज्ञानं यस्य तु चक्षुरादिकरणवहिः स्पंदते । _

जानामेति तमेव भन्तमनुभत्येत्समस्तं जगत्

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥4॥

देहं प्राणपिन्द्रियण्यपि चलं बुद्धिं च शून्यं विदुः स्त्रीबलांजदोपमास्त्वहमिति भ्रान्त भूषण वादिनः । मायाशक्तिविलासकल्पितमहाव्यामोहसंहारिणे तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥5॥

उग्रप्रभावित दिवाकरेन्दुसदृशो मायासमाच्छदनात् सन्मात्राः कारणोपसंहरणतो योऽभूतसुप्तः पुमान् । प्रगस्वपसमिति प्रबोधसमये यः प्रत्यभिज्ञाते तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणीमूर्तये ॥6॥

बाल्यादिश्वपि जाग्रदादिषु तथा सर्वस्ववस्थस्वपि व्यवृत्तस्वनुवर्तमानमहमित्यन्तः स्फुरन्तं सदा । स्वात्मानं प्रकटीक्रोति भजतां यो मुद्राभद्राय तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तिये ॥7॥

विश्वं पश्यति कार्यकारान्तया स्वस्वामीम्बन्धतः

शिष्याचार्यतया तथैव पितृपुत्रद्यात्मना भेदतः ।

स्वप्ने जाग्रति वा य एष पुरुषो मायापरिभ्रमितः

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥8॥

भूर्भांस्यनलोऽनिलोऽम्बरमहर्नाथो अमान पुमानं इथ्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम् नान्यत् किञ्चन विद्यते विमृशतांसमात्प्रसमात्द्विभोः तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणयामूर्तये ॥यय ॥ 

सर्वात्मत्वमिति स्फुटक्लिओमिदं यस्मादुष्मिन् स्तवे तेनास्य श्रवणत्तदर्थमन्नाध्यनाच्च संकीर्तनात् । सर्वात्मत्वमहाविभूतिहितं स्यादीश्वरत्वं स्वतः सिद्ध्येत्तत्पुनृष्टधा परिणतं चैश्वर्यमव्यहतम् ॥10

நடன புகைப்படம். நாட்டிய உபாஸனா நடனப்பள்ளி.


BHARATHAM - CANARA BANK. Family function








 

Mogappair kanaka durga koil 
SIVARATHIRI  natyanjali program



  padi sivan koil




 

சிதம்பரம் .






Wednesday 22 November 2023

நாட்டுக்கோட்டை சத்திரம், பஞ்சவடி, நாசிக்.



 கார்த்திக் ஸ்வாமி மந்திர். நாட்டுக்கோட்டை சத்திரம், சனி சௌக், பஞ்சவடி, நாசிக்.

श्री  कार्तिक  स्वामी  मन्दीर् , शनि चंद्र, पञ्चवटी, नासिक्।