Thursday 30 November 2023

திருக்கச்சி நம்பிகள் ஆராதனை.

 



வைசிய குலத்தில் பிறந்த செல்வந்தரான கஜேந்திர தாசர் தன் சொத்துக்கள் முழுவதையும் காஞ்சி வரதனுக்காகவே அர்ப்பணித்தார். பூவிருந்தவல்லியில் தன் சொந்த நிலத்தில் நந்தவனம் அமைத்து, தன் கையாலேயே மலர் மாலைகள் வரதனுக்காக தொடுத்து காஞ்சி வரை நடந்தே சென்று அர்ப்பணித்து மகிழ்ந்தார். காஞ்சி வரதனும் இவர் பக்தியில் மகிழ்ந்து தினமும் இவருடன் நேரில் வந்து பேசி மகிழ்வார். இவர் ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதிக்கும் சென்று சேவை செய்வதற்காக செல்ல ரங்கநாதனும் ஏழுமலையானும் காஞ்சி வரதன் உன் பிரிவால் வாடுகிறான். ஆகையால் நீ அங்கு சென்று வரதனுக்கு கைங்கர்யம் செய் என்று அனுப்பி வைத்தார்களாம். அன்று முதல் இவர் "திருக்கச்சி நம்பிகள்" என போற்றப்பட்டார்.அப்பேர்ப்பட்ட உன்னதமான பக்தி கொண்ட இவரது ஆராதனை அவர்தம் அவதார தினமான மாசி மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தன்று பூவிருந்தவல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் வெகு விமரிசையாக 10 நாட்கள் ப்ரம்மோற்சவமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment