ஆனந்தமயமானவன் கிருஷ்ணன். சுகமான சுமைகள் என்பது போல ஞானிகள் இன்பம், துன்பம் அனைத்திலுமே இறைவனைக் காண்கிறார்கள். அதனாலேயே புடம் போட்டத் தங்கம் போல், யுகங்கள் பல கடந்தாலும் அவர்கள் மங்காப் புகழுடன் இன்னமும் வாழ்வியல் தத்துவமாக விளங்குகிறார்கள்.
Saturday 28 August 2021
கோகுலாஷ்டமி
Saturday 21 August 2021
ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம்
22.8.2021 ஞாயிற்றுக்கிழமை "யஜூர் வேத உபாகர்மா". திங்கட்கிழமை 22.8.2021 அன்று "காயத்ரி ஜபம் ". பொதுவாக ஆவணி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நக்ஷத்திரத்தில் ருக் வேத உபாகர்மாவும், அவிட்டம் நக்ஷத்திரத்தில் யஜுர் வேத உபாகர்மாவும் நடைபெறும். ஸாம வேத உபாகர்மா வினாயகர் சதுர்த்தி சமயம் நடைபெறும்.
உலக இயக்கத்தின் மூலக்கருவான வேதங்களை பிரம்மாவிடமிருந்து அபகரித்துச் சென்ற அசுரனை மஹாவிஷ்ணு 'ஹயக்ரீவராக' அவதரித்து அதாவது குதிரை வடிவம் எடுத்து விரட்டி பிடித்து வேதங்களை மீட்டு திரும்பவும் பிரம்மாவிடம் ஒப்படைத்த திருநாள் ஆதலால் அன்றைய தினம் "ஹயக்ரீவர் ஜயந்தி" ஆகவும் கொண்டாடுவர்.
உபாகர்மா என்றால் தொடக்கம் என்று பொருள். உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் இந்த சடங்கினை உருவாக்கிய தங்களது 'ரிஷிகளுக்கு' ஆறு மற்றும் குளக்கரைகளில் அமர்ந்து, நன்றி கூறி தர்ப்பணம் செய்து புதிய 'பூணூலை' மாற்றிக் கொள்வர். அத்துடன் அன்றைய தினம் வேத பாராயணமும் செய்வர்.
Saturday 14 August 2021
புன்னை நல்லூர் மாரியம்மன் முத்து பல்லக்கு
தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட சோழமன்னர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட காவல் சக்திகளை நிறுவி வழிபட்டார்கள். அந்த அஷ்ட சக்திகளில் தஞ்சையின் கிழக்குப் பகுதியில் அமர்ந்து கோயில் கொண்டு அருளாட்சி செய்பவள் தான் புன்னைநல்லூர் மாரியம்மன்.
Tuesday 10 August 2021
ஆடிப்பூரம்
ஆக. 11ம்தேதி [ஆடி 26] புதன்கிழமையன்று அம்பிகைக்கு உகந்த பூர நக்ஷத்திரம்.
Saturday 7 August 2021
ஆடி அமாவாசை
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஒம்பல் தலை.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை.
Sunday 1 August 2021
ஆடிப்பெருக்கு 2021
வருகிற ஆகஸ்ட் 3 ஆம்தேதி செவ்வாயன்று "ஆடி பதினெட்டாம் பெருக்கு". பொங்கிப் பிரவகித்து பெருகி விரிந்து தான் ஓடும் பாதையையெல்லாம் வளப்படுத்திச்