Tuesday 10 August 2021

ஆடிப்பூரம்

 ஆக. 11ம்தேதி [ஆடி 26] புதன்கிழமையன்று அம்பிகைக்கு உகந்த பூர நக்ஷத்திரம். 

இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்தாகவும், மற்றும்   பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததாகவும் புராணங்கள் உரைக்கின்றன. இதனால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்பெறும். இதில் தேர் வீதி உலா, ஐந்தாம் நாள் கருட சேவை, ஏழாம் நாள் பெருமாள் ஆண்டாள் மடியில் 'சயனத் திருக்கோலம்' என விமரிசையாக நடைபெறும்.
  அவ்வண்ணமே, அம்பிகைக்கும் ,  பத்து நாட்கள் விழாவாக காலை மாலை இருவேளையும்  அபிஷேகம், அலங்காரம் இவற்றோடு பூரம் கழித்தல் எனும் ''ருது சாந்தி விழா, திருமணம், வளைகாப்பு மற்றும் சீமந்தம்   என  
கோலாகலமாக பக்தர்களின் வாழ்விலும் இது போன்ற மங்கல நிகழ்வுகளோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற வேண்டுதலோடு கொண்டாடப்படுகிறது.
பார்வதி தேவி தன் உடல் மூலக்கூறுகள  உருவானவர் கணபதி.  சிவனின்நெற்றிக்கண்ணிலிருந்து உதித்தவர்முருகப்பெருமான். மகாவிஷ்ணுவின் மோஹிணி அவதாரத்தின் போது சிவா விஷ்ணு ஐக்கியத்தால் உருவானவர் ஐயப்பன், இவை யாவரும் அறிந்ததே. இவர்களைத் தவிர இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் உண்டு. அசோக சுந்தரி, ஜோதி மற்றும் மானஸா.
image.png
   அதில் முதல் பெண் குழந்தையாக, வினாயகருக்கும்  மூத்தவளாக, 'அசோகசுந்தரி' என்ற பெண் மகவை பார்வதி  பெற்ற கதையை அறிவோமா? 
    ஒருமுறை, சிவபிரான் போருக்காக சென்றிருந்த சமயம் பார்வதி தேவி, நீண்ட நாட்கள் தனித்திருக்கும் நிலையைப் பொறுக்கமாட்டாமல், தனக்கு ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால், தன் பேச்சுத் துணைக்கும், அக்குழந்தையை வளர்ப்பதிலும் தன் நேரப் பொழுது, இனிமையானதாக இருந்திருக்கும் என ஏங்கி சோகத்தில் தவித்தாள்.. உடன் பார்வதிக்கு, தேவலோகத்தில் இருக்கும் கேட்டதைக் கொடுக்கும், 'கற்பக மரம்' நினைவுக்கு வந்தது. சிறிதும் தாமதியாமல், கற்பக மரத்திடம் சென்று தனக்கு ஒரு பெண் குழந்தையை வேண்டினாள்.
 உடன் பார்வதி தேவியின் கைகளில் அழகிய பெண் குழந்தை தவழ்ந்தது. தன் பெரும் சோகம் நீங்கப் பெற்றவளாய், அகமகிழ்ந்தாள் தேவி.
 'அ' எனற சொல் நேர்மறை எண்ணம் கொண்டது. சோகம் என்ற எதிர்மறை சொல்லுக்கு முன் 'அ' சொல்லைச் சேர்த்தும்,  ;சோகத்தைப் போக்கியவள்] மிகுந்த பேரழகுடன் குழந்தை இருந்ததால்' சுந்தரி' என சேர்த்து குழந்தைக்கு 'அசோகசுந்தரி' என பெயர் சூட்டினாள். 
image.png
பார்வதியால் உருவாக்கப்பட்ட கணபதியை யார்? என அறியாமல் சிவபிரான் போரிட்டு அவர் தலையைக் கொய்த போது, பயந்து அதிர்ந்த  அசோகசுந்தரி உப்புக் குவியலில்    மறைந்திருந்ததாக 'புராணக் கதை கூறுகிறது.இந்த பாலாம்பிகையே துர்க்கையின் மஹிஷாசுர வதத்தின் போது 'பண்டாசுரனின்' முப்பது புதல்வர்களோடு போரிட்டு வென்றாள் என லலிதா சஹஸ்ரநாமம் இவள் புகழைச் சிறப்பித்துக் கூறுகிறது.
அசோகசுந்தரி பருவ வயதை அடைந்ததும், இந்திரனுக்கு இணையான செவ்வாக்கு பெற்ற, 'நகுஷன்' என்பவனுக்கு திருமணம் முடித்தார் சிவபிரான்.. இவர்களது மகனே புகழ் பெற்ற 'யயாதி' ஆவான்.
அசோக சுந்தரி வழிபாடு வட மாநிலங்களில் பிரபலம்.  நம் தென்னகத்தில் அவ்வளவாக பிரபலம் இல்லை என்றாலும்  ' பாலா' என்ற நாமத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது . .
 பாலாம்பிகை கோயில் காஞ்சிபுரம் அருகே ' நெமிலி' என்ற ஊரிலும், திருநெல்வேலியிலும் திருக்கோயில் அமைந்துள்ளது.       
image.png  
சிவபிரான் மற்றும் பார்வதியின் ஒளிவட்டத்திலிருந்து உதித்தவள் 'ஜோதி' . இவள் வெளிச்சத்தின் உருவகமாகக் கருதப்படுகிறாள். இவள் 'ஜுவாலாமுகி' என்ற பெயரில் வடநாட்டில் கொண்டாடப்படுகிறாள். 
கத்ரு என்ற நாகதேவதை செதுக்கிய சிலையில் சிவனின் அம்சமாக உருவாகியவள்.அதனால், இவள் பெயர் 'மானஸா' என்றும், இவள் பாம்புக் கடிக்கு தீர்வளிக்கும், கருணையுள்ளம் கொண்டவ்ள் என வட நாட்டு கிராமங்களில் மானஸாவை கொண்டாடுகின்றனர். பாற்கடலை கடைந்த பொழுது உண்டான ஆலகால விஷத்தை சிவன் உண்ட பொழுது அவருக்கு விஷத்தினால் தீங்கு நேராவண்ணம் காப்பாற்றியவள் இந்த மானஸா என அறியப்படுகிறது.

6 comments: