Saturday 21 August 2021

ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம்

  22.8.2021 ஞாயிற்றுக்கிழமை "யஜூர் வேத உபாகர்மா". திங்கட்கிழமை 22.8.2021 அன்று "காயத்ரி ஜபம் ". பொதுவாக ஆவணி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நக்ஷத்திரத்தில் ருக் வேத உபாகர்மாவும், அவிட்டம் நக்ஷத்திரத்தில் யஜுர் வேத உபாகர்மாவும் நடைபெறும். ஸாம வேத உபாகர்மா வினாயகர் சதுர்த்தி சமயம் நடைபெறும்.  

உலக இயக்கத்தின் மூலக்கருவான வேதங்களை பிரம்மாவிடமிருந்து அபகரித்துச் சென்ற அசுரனை மஹாவிஷ்ணு  'ஹயக்ரீவராக' அவதரித்து அதாவது குதிரை வடிவம் எடுத்து விரட்டி பிடித்து வேதங்களை மீட்டு திரும்பவும் பிரம்மாவிடம் ஒப்படைத்த திருநாள் ஆதலால் அன்றைய தினம் "ஹயக்ரீவர் ஜயந்தி" ஆகவும் கொண்டாடுவர். 

உபாகர்மா என்றால் தொடக்கம் என்று பொருள். உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் இந்த சடங்கினை உருவாக்கிய தங்களது 'ரிஷிகளுக்கு' ஆறு மற்றும் குளக்கரைகளில் அமர்ந்து, நன்றி கூறி தர்ப்பணம் செய்து புதிய 'பூணூலை' மாற்றிக் கொள்வர். அத்துடன் அன்றைய தினம் வேத பாராயணமும்  செய்வர். 

       பிரம்மச்சாரிகள் ஒரு முப்புரி நூலினையும், திருமணமான ஆண்கள் இரண்டு முப்புரி நூலினையும், தந்தையை இழந்தவர் மூன்றாவது முப்புரி நூலையும் அணிந்து கொள்வர் இவர்கள் தினமும் மூன்று வேளையும். 'காயத்ரி ஜபம் செய்யவேண்டும் என்பது நியதி.
  குருவிடமிருந்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெற்று
  ஓம் பூ : புவ: ஸுவ : மஹ: ஜன: தப: சத்யம் சத்யம் தத்ஸ்விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய
 தீமஹி தியோயோன :.ப்ரசோதயாத்
     என்று வலது கையினை அங்கவஸ்திரத்தால் மூடிக் கொண்டு 108 அல்லது 1008 வரை ஜபிப்பதால் சகலவிதமான பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இது உலக நன்மைக்காகவும், கூட்டு பிரார்த்தனையாகக் கடைபிடிக்கப்படுகிறது.
image.png
  லௌகீக விஷயங்களை அறிந்து கொள்ள உதவும் நம் இரு கண்கள் தவிர, மெய்ஞ்ஞானத்தை அறியக் கூடிய துணைக்கண்ணாக அதாவது மூன்றாவது கண்ணாக இந்த உப நயனம் விளங்குகின்றது.
அனைத்து உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய கடவுளான சூரியனே!
 பரம்பொருள்  தத்துவத்தை உணரக் கூடிய வகையில் எனது ஞான அறிவுக் கண்ணையும் திறந்து தூண்டக்கூடியதாகட்டும் என்பதே இதன் விளக்கம். 
சூரிய தேவனின் மஹிமையை உணர்த்தும் இந்த மந்திரத்தை உள் வாங்கி மனதில் தியானித்து பரம்பொருளை உணர்வதாகும்
  இந்த மந்திரத்தில் வரும் பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம், மஹர லோகம், ஜன லோகம், தப லோகம் மற்றும்சத்ய லோகம் என ஏழு உலகங்களையும் குறிக்கிறது.
ஈரேழு பதினான்கு உலகங்கள் என கூறுவார்கள் அல்லவா? அவைகள்: நம் பூமியைச் சேர்த்து அதற்கு மேல் உள்ள ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழாக ஏழு உலகங்களும் ஆகும்
பூ லோகம் ஓரறிவு முதல் ஆறறறிவு வரை படைத்த உயிரினங்கள் வாழ்வது. அதாவது, நாம் வாழும் பூமி. 
புவர் லோகம்  .கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்களுக்கான    தேவதைகளின் இருப்பிடம்
image.png
ஸுவர்லோகம்  முனிவர்களும், மகரலோகம் இந்திரன் முதலான தேவர்கள் வசிக்கும் இடம், ஜனோலோகம் : பித்ருக்களின் வசிப்பிடமாகவும், தபோலோகம் : தேவதைகளும், இறுதியாக சத்யலோகத்தில் 'பிரம்ம தேவனும்' வசிப்பதாகக் கூறப்படுகிறது.
 பூமிக்கு கீழுள்ள ஏழு உலகங்கள் : 
1.அதல லோகத்தில் நாகர்களும், 
2.விதல லோகத்தில் அரக்கர்களும், 
3. சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் மஹாவிஷ்ணுவால ஆட்கொள்ளப்பட்ட 'மஹாபலி சக்கரவர்த்தியும், 
4. தலாதல லோகத்தில் மாயாவிகளும், 
5. மஹாதல லோகத்தில் தன் நற்செயல்களால் புகழடைந்த அசுரர்களும், 
6. பாதாள லோகத்தில் வாசுகி போன்ற பாம்புகள் வசிப்பதாகவும், மற்றும் 
7.ரஸாதல லோகத்தில் அசுரர்களின் குருமார்களும் வசிப்பதாகக் கூறப்படுகிறது. 
image.png

6 comments:

  1. Very Informative
    An eye opener to youngsters. Keep writing
    God bless you
    G.s.viji

    ReplyDelete
  2. Super. Teriyadha pala anmiha seithihal matrum Purana kadaihal yellam terindu kolla mudihiradhu. Nandri.

    ReplyDelete
  3. Super. Teriyadha pala anmiha seithihal matrum Purana kadaihal yellam terindu kolla mudihiradhu. Nandri

    ReplyDelete
  4. தங்கள் அனைவருடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஒப்பற்ற ஒரு ஆன்மீக சேவை..பல புதிய செய்திகள்.. அற்புத படைப்பு.. மேலும் இதுபோல் பல அரிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete