பிரம்மச்சாரிகள் ஒரு முப்புரி நூலினையும், திருமணமான ஆண்கள் இரண்டு முப்புரி நூலினையும், தந்தையை இழந்தவர் மூன்றாவது முப்புரி நூலையும் அணிந்து கொள்வர் இவர்கள் தினமும் மூன்று வேளையும். 'காயத்ரி ஜபம் செய்யவேண்டும் என்பது நியதி.
குருவிடமிருந்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெற்று
ஓம் பூ : புவ: ஸுவ : மஹ: ஜன: தப: சத்யம் சத்யம் தத்ஸ்விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தியோயோன :.ப்ரசோதயாத்
என்று வலது கையினை அங்கவஸ்திரத்தால் மூடிக் கொண்டு 108 அல்லது 1008 வரை ஜபிப்பதால் சகலவிதமான பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இது உலக நன்மைக்காகவும், கூட்டு பிரார்த்தனையாகக் கடைபிடிக்கப்படுகிறது.
![image.png](https://mail.google.com/mail/?ui=2&ik=ba8fe4ed94&attid=0.2&th=17b681fed76b2227&view=fimg&rm=17b681fed76b2227&sz=w1600-h1000&attbid=ANGjdJ8MFRErsXZ-QOpWcY_ibNv2jS8Au1-k6mpgNovJfWN2-pMZlW8lZf7uFt7dcPRO6CNNj_WtJJ4Ieo-kNwYqtfyNKLPJFDk4-cUaQUb-f8R7MBTbdRzhan_A_qg&disp=emb&realattid=ii_kslld2a81&zw/downloaded)
லௌகீக விஷயங்களை அறிந்து கொள்ள உதவும் நம் இரு கண்கள் தவிர, மெய்ஞ்ஞானத்தை அறியக் கூடிய துணைக்கண்ணாக அதாவது மூன்றாவது கண்ணாக இந்த உப நயனம் விளங்குகின்றது.
அனைத்து உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய கடவுளான சூரியனே!
பரம்பொருள் தத்துவத்தை உணரக் கூடிய வகையில் எனது ஞான அறிவுக் கண்ணையும் திறந்து தூண்டக்கூடியதாகட்டும் என்பதே இதன் விளக்கம்.
சூரிய தேவனின் மஹிமையை உணர்த்தும் இந்த மந்திரத்தை உள் வாங்கி மனதில் தியானித்து பரம்பொருளை உணர்வதாகும்
இந்த மந்திரத்தில் வரும் பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம், மஹர லோகம், ஜன லோகம், தப லோகம் மற்றும்சத்ய லோகம் என ஏழு உலகங்களையும் குறிக்கிறது.
ஈரேழு பதினான்கு உலகங்கள் என கூறுவார்கள் அல்லவா? அவைகள்: நம் பூமியைச் சேர்த்து அதற்கு மேல் உள்ள ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழாக ஏழு உலகங்களும் ஆகும்
பூ லோகம் ஓரறிவு முதல் ஆறறறிவு வரை படைத்த உயிரினங்கள் வாழ்வது. அதாவது, நாம் வாழும் பூமி.
புவர் லோகம் .கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்களுக்கான தேவதைகளின் இருப்பிடம்
![image.png](https://mail.google.com/mail/?ui=2&ik=ba8fe4ed94&attid=0.1&th=17b681fed76b2227&view=fimg&rm=17b681fed76b2227&sz=w1600-h1000&attbid=ANGjdJ8RRZvawdcwImHhB9grhlgyjyGRgYXhQ4WUTVQikv5acWw7nhLq3AH7XfFYwR2xLE8-fXx2UWbHmtt1Js_hvrOm5sBVTPFaYb57pwuAd0uSjA2_lTsItMtt_qM&disp=emb&realattid=ii_ksll4kvm0&zw/downloaded)
ஸுவர்லோகம் முனிவர்களும், மகரலோகம் இந்திரன் முதலான தேவர்கள் வசிக்கும் இடம், ஜனோலோகம் : பித்ருக்களின் வசிப்பிடமாகவும், தபோலோகம் : தேவதைகளும், இறுதியாக சத்யலோகத்தில் 'பிரம்ம தேவனும்' வசிப்பதாகக் கூறப்படுகிறது.
பூமிக்கு கீழுள்ள ஏழு உலகங்கள் :
1.அதல லோகத்தில் நாகர்களும்,
2.விதல லோகத்தில் அரக்கர்களும்,
3. சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் மஹாவிஷ்ணுவால ஆட்கொள்ளப்பட்ட 'மஹாபலி சக்கரவர்த்தியும்,
4. தலாதல லோகத்தில் மாயாவிகளும்,
5. மஹாதல லோகத்தில் தன் நற்செயல்களால் புகழடைந்த அசுரர்களும்,
6. பாதாள லோகத்தில் வாசுகி போன்ற பாம்புகள் வசிப்பதாகவும், மற்றும்
7.ரஸாதல லோகத்தில் அசுரர்களின் குருமார்களும் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
![image.png](https://mail.google.com/mail/?ui=2&ik=ba8fe4ed94&attid=0.3&th=17b681fed76b2227&view=fimg&rm=17b681fed76b2227&sz=w1600-h1000&attbid=ANGjdJ_qcu6Uzg82wyW8m8KyGcIpL4nNBme5_5zzbNrMTu1pBarolS5-jhuebOMoPkkVebgaUYtj2VHgYhuwE-xfPMLWYuUaxhTFI2VtpMuJexxh5ALt4IIkA4bOMCY&disp=emb&realattid=ii_kslljdah2&zw/downloaded)
super
ReplyDeleteVery Informative
ReplyDeleteAn eye opener to youngsters. Keep writing
God bless you
G.s.viji
Super. Teriyadha pala anmiha seithihal matrum Purana kadaihal yellam terindu kolla mudihiradhu. Nandri.
ReplyDeleteSuper. Teriyadha pala anmiha seithihal matrum Purana kadaihal yellam terindu kolla mudihiradhu. Nandri
ReplyDeleteதங்கள் அனைவருடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஒப்பற்ற ஒரு ஆன்மீக சேவை..பல புதிய செய்திகள்.. அற்புத படைப்பு.. மேலும் இதுபோல் பல அரிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ReplyDelete