தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட சோழமன்னர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட காவல் சக்திகளை நிறுவி வழிபட்டார்கள். அந்த அஷ்ட சக்திகளில் தஞ்சையின் கிழக்குப் பகுதியில் அமர்ந்து கோயில் கொண்டு அருளாட்சி செய்பவள் தான் புன்னைநல்லூர் மாரியம்மன்.
கடல் கடந்து சோழ சாம்ராஜ்யம் எங்கெல்லாம் கொடி நாட்டியதோ? அங்கெல்லாம் மாரியம்மனின் அருட்கொடி பரவியிருந்தது என்றால் அது மிகையல்ல.
சோழர்களால் இந்த அம்மன் ஸ்தாபிக்கப்பட்டாலும், பின்னால் வந்த மராட்டிய மன்னர்களும் இந்த அம்மனின் மஹிமையை உணர்ந்து, பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
புன்னைவனத்தில் சுயம்புவாகத் தோன்றிய இந்த அம்மனைத் தான் கண்ட கனவின் மூலம் கண்டெடுத்து கோயில் எழுப்பி "புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்" என பெயரிட்டு, அந்த ஊரையே இத்திருக்கோயிலுக்கு சொந்தமாக்கி, அரும்பணி தொடங்கி வைத்த மராட்டிய மன்னர் வெங்கோஜி' மகாராஜா முதல், பல ஆங்கிலேய அதிகாரிகள், கடைசியாக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் இன்றளவிலும் பல பக்தகோடிகள் மாரியம்மனின் சக்தியை உணர்ந்து வழிபட்டு பலனடைந்தவர்கள் ஏராளம்.
சரபோஜி மன்னர் தன் ஆட்சிக் காலத்தில், மகாமண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் இரண்டாவது பெரிய சுற்றுச் சுவர் என விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளார்.
இந்த அம்மனிடம் அம்மை நோய் முதல் தங்களது பலவித கஷ்டங்களுக்கும் தீர்க்க வேண்டியபடி பிரார்த்தனை நிறைவேறிய மகிழ்வோடு அம்மனைக் கொண்டாடி, நேர்த்திக் கடன் செலுத்தி செல்லுகின்றனர். வருடா
வருடம் அம்மனுக்கு சுற்றுப்புற ஊர் மக்கள் அனைவரும் பால்குடம் எடுத்தும், குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், காது குத்து, கல்யாணம் என அம்மனிடத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை நல்லவிதமாக நடத்தித் தர முழு சரணாகதியாய் அவள் பொற்பாதங்களில் தஞ்சம் அடைந்து விடுவார்கள்.
விழாக்காலங்களில் கலை நிகழ்ச்சிகள் கச்சேரியும் அமர்க்களமாக கொண்டாடப்படும்.
பக்தர்கள் கலைநிகழ்ச்சிகளை விடியும் வரை கண்டுகளித்து கலைஞர்களையும் உற்சாகமாக ஊக்குவிப்பார்கள்.
அப்படிப்பட்ட இந்த மாரியம்மனின் சன்னதியில் 1987 முதல் 1993 வரை எனது பரதநாட்டிய நிகழ்ச்சியை தொடர்ந்து அடியேன் நிகழ்த்துவதற்கு அந்த மாரியம்மனின் மாரி போன்ற கருணையன்றி வேறென்ன இருக்க முடியும். அதை நினைக்கும் இச்சமயத்தில் உள்ளம் அவள் அருள் திறத்தை எண்ணி பாகாய் உருகுகிறது. உடல் சிலிர்க்கிறது.
ஆகஸ்ட் 15 2021 இன்றைய தினம் ஆடி மாத கடைசி ஞாயிறு. இத்தினத்தில் அம்மனை அலங்கரித்து 'முத்துப் பல்லக்கில்' வானவேடிக்கை மேளதாளத்துடன் வேத கோஷம் முழங்க வீதி உலா வரும் அழகை, அம்மனை தரிசிக்க பக்தர்கள் சாலையின் இரு புறங்களிலும் ஆவலோடு கூடியிருப்பர்.
nice
ReplyDeleteGood aritcle about Mariyamman. Very informative too
ReplyDeleteGod bless you
Lot of information about Maratha kings and their devotion.
ReplyDeleteKeep writing.
G.S. Viji
Nice article. Useful information. Amma Ellorayum kAkkattum🙏
ReplyDeleteNice article 👍👍👍🙏🙏🙏
ReplyDeleteஅனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏
ReplyDeleteHappy Independence day. Jaihind. 🙏🙏🙏
ReplyDelete