Wednesday 25 January 2023

பாசத்திற்கோர் மணி அண்ணன்.

 


அருமைத் தங்காய்! என்றாய் - உன்

அடி ஒற்றி வளர்ந்ததனால் 

அருமையாய்த் தான் இருப்பேன் என்றேன்.

பெருமை நங்காய்!! என்றாய் - என் 

பெருமையை ஊராரிடம் நீ மெச்சியதால் 

பெருமையாய்த் தான் இருப்பேன் என்றேன்.

பாங்காய் நிதர்சனம் உணர்த்தினாய் - பிறர்

இயல்பின் சுபாவம் ஏற்று பழகினாய் - உன்

உடன் பிறந்தோரிடத்து பாசமும் - அன்பு 

மனைவியிடத்தில் உன் நேசமும் - சின்னஞ்

சிறாரிடத்தில் உன் குதூகலமும் - என்

கண்களில் நித்தம் நிழலாடுகிறது

             தமையனே! 

காலனால் காணாமல் போனாய் - இன்று

 காலமும் ஓராண்டு ஆகியதே!

காலன் தான் உனை மறைத்தான் - எனில்

உனை நினைத்து எழுதும் வார்த்தைகளை

கண்ணீரும் மறைக்கிறதே  - என்

இதயமும் கலங்குகிறதே 

 சூரியன் உதிக்கும் முன் எங்கள்

தமையன் மறைந்ததேன்? 

உன் நிழலில் வளர்ந்த நான் - என்

நிழலை நீயாக நினைத்து வாழ்கின்றேன். 

கண்ணின் மணியான பாசமிகு 

     அண்ணன் 

    சுப்பிரமணிக்கு

எங்களின் கண்ணீர் அஞ்சலி.!!!

                         இப்படிக்கு

உடன்பிறந்தோர் மீனா  சுகவனம் வசந்தி

   மற்றும் 

தனலக்ஷ்மி சுப்பிரமணியம்.

25.1.2023.



3 comments:

  1. அன்பும் பாசமும் நிறைந்த அரிய வார்த்தைகள்
    மிக அருமை

    ReplyDelete
  2. அண்ணாவின் நினைவை அவர்தம்பெருமையை அருமையாக கவிதை வடிவில் சொல்லியதை படிக்கும் போது கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது வசந்தி !
    ஆற்றோண்ணா பிரிவு !

    - V. Sugavanam

    ReplyDelete