அருமைத் தங்காய்! என்றாய் - உன்
அடி ஒற்றி வளர்ந்ததனால்
அருமையாய்த் தான் இருப்பேன் என்றேன்.
பெருமை நங்காய்!! என்றாய் - என்
பெருமையை ஊராரிடம் நீ மெச்சியதால்
பெருமையாய்த் தான் இருப்பேன் என்றேன்.
பாங்காய் நிதர்சனம் உணர்த்தினாய் - பிறர்
இயல்பின் சுபாவம் ஏற்று பழகினாய் - உன்
உடன் பிறந்தோரிடத்து பாசமும் - அன்பு
மனைவியிடத்தில் உன் நேசமும் - சின்னஞ்
சிறாரிடத்தில் உன் குதூகலமும் - என்
கண்களில் நித்தம் நிழலாடுகிறது
தமையனே!
காலனால் காணாமல் போனாய் - இன்று
காலமும் ஓராண்டு ஆகியதே!
காலன் தான் உனை மறைத்தான் - எனில்
உனை நினைத்து எழுதும் வார்த்தைகளை
கண்ணீரும் மறைக்கிறதே - என்
இதயமும் கலங்குகிறதே
சூரியன் உதிக்கும் முன் எங்கள்
தமையன் மறைந்ததேன்?
உன் நிழலில் வளர்ந்த நான் - என்
நிழலை நீயாக நினைத்து வாழ்கின்றேன்.
கண்ணின் மணியான பாசமிகு
அண்ணன்
சுப்பிரமணிக்கு
எங்களின் கண்ணீர் அஞ்சலி.!!!
இப்படிக்கு
உடன்பிறந்தோர் மீனா சுகவனம் வசந்தி
மற்றும்
தனலக்ஷ்மி சுப்பிரமணியம்.
25.1.2023.
அன்பும் பாசமும் நிறைந்த அரிய வார்த்தைகள்
ReplyDeleteமிக அருமை
🙏🙏🙏😔
Deleteஅண்ணாவின் நினைவை அவர்தம்பெருமையை அருமையாக கவிதை வடிவில் சொல்லியதை படிக்கும் போது கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது வசந்தி !
ReplyDeleteஆற்றோண்ணா பிரிவு !
- V. Sugavanam