ஹரிதாளிகா கௌரி விரதம், வினாயகர் சதுர்த்தி, ஸாமவேத உபாகர்மா மற்றும் ரிஷிபஞ்சமி
செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
பர்வத ராஜனின் வேண்டுகோளுக்கிணங்கி அன்னை அவருக்கு மகளாக அவதரிக்க, அதன் பின், பார்வதிதேவி, சிவபிரானை திருமணம் செய்யும் பொருட்டு 16 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தாள். அதனால், இந்த விரதம் கடைபிடிப்பவர்கள், கலசம் வைத்து வழிபட்ட பின்,16 முடிச்சு கொண்ட மஞ்சள் தடவிய மங்கலக் கயிற்றை கட்டிக் கொள்வர். இளம் பெண்கள் திருமண சிறக்கவேண்டி இவ்விரதமிருப்பர்.
வினாயகர் சதுர்த்தி
ஸாமவேத உபாகர்மா
இந்த செப். 2 ஆம் தேதி ஆவணி மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் தான் "ஸாம வேதஉபாகர்மா" நடைபெறும். புது பூணூலை அணிந்தபின் ஸாமவேதம் இசைப்பர். ஆம்! இசைப்பர். எனில், மற்ற வேதங்களை ஓதுவர். இசையே ஸாம வேதத்திலிருந்து தான் பிறந்தது.
ரிஷிபஞ்சமி
அடுத்த் செப். 3 செவ்வாயன்று 'ரிஷி பஞ்சமி'. சப்த ரிஷிகளான காஷ்யப, அத்ரி, பரத்வாஜ, கௌதம, வஸிஷ்ட,விஸ்வாமித்ர மற்றும் ஜமதக்னி எனும் 7 ரிஷிகளை பூஜிப்பர். இதையே கேரள மக்கள் "விஸ்வகர்மா பூஜை" செய்து வழிபடுவர். வட நாட்டவர் இன்றைய தினத்தில் '' ரக்ஷா பந்தன்" என தன் சகோதரர்களின் நலம் விரும்பி கொண்டாடுவர்.
No comments:
Post a Comment