Tuesday 21 September 2021

கணபதி பாடல்கள்




                    விநாயகர் பாடல்கள்

                               பாடல் 1

பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே 
அரசமரத்தின் நிழலிலே 
வீற்றிருக்கும் பிள்ளையார் 
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு 
அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் 
தீர்த்து வைக்கும் பிள்ளையார் 
                                                    ( பிள்ளையார்)
அவல் பொரி கடலையும் 
அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கஷ்டங்களைப் போக்குவார்.
                                                     ( பிள்ளையார்)
வேலனுக்கு அண்ணனாம் 
வேள்விக்கெல்லாம் முதல்வனாம் 
வேண்டும் வரம் யாவுமே
தந்தருளும் பிள்ளையார். 
                                                       ( பிள்ளையார்)
மஞ்சளிலே செய்யினும் 
மண்ணினாலே செய்யினும்       
ஐந்தெழுத்து மந்திரத்தை 
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார். 
ஓம் நமசிவாய எனும்               
ஐந்தெழுத்து மந்திரத்தை       
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார். 
                                                       ( பிள்ளையார்).
கலியுகத்து விந்தையை
காணவேண்டி  அனுதினம் 
எலியின் மீது ஏறியே 
இஷ்டம் போல சுற்றுவார்.
                                                          ( பிள்ளையார்)
                               
                  -----------×--------



        
                      பாடல்  - 2

ராகம் : நாட்டை                தாளம்: ஆதி.

                       பல்லவி 

ஞானவிநாயகனே சரணம் - நல்லவனே

மற்றெல்லாம் வல்லவனே வருக ஸ்ரீ (-)

                      அனுபல்லவி

வானமளவிய ஓர் விசித்திரம் கண்டேன் 

மன்னவனே மெய் பரமானந்தம் கொண்டேன் 

                                 சரணம்

ஓம் எனும் ப்ரணவ உண்மை உட்பொருளே 

ஓதும் கம்பீரநாட்டை பாடவும் அருளே - சாமி

சரவண செந்தமிழ் எனக்கருளே  - நல்

சமரசம் பொங்கும் ஜகமதில் எங்கும் 

புகழுடன் விளங்கும் கலைகளும் வளர - ஸ்ரீ (-)







                            பாடல் - 3

ராகம் : திலங்              தாளம் : ஆதி

                          பல்லவி

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே.

                      அனுபல்லவி 

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் 

சன்னதி சரணடைந்தோமே

சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும் 

தந்தருள் சற்குரு நீயே ( - )

                          சரணம் - 1

ஆதிமூல கணநாத கஜானன

அற்புத தவள ஸ்வரூபா

தேவ தேவ ஜய விஜய  விநாயக 

சின்மய பரசிவ தீபா (  - )

                        சரணம் - 2

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார்- உள்ளே

தேடி கண்டு கொள்ளலாமே 

கோடி கோடி மத யானைகள் பணி செய்ய 

குன்றென விளங்கும் பெம்மானே - குண

குன்றென விளங்கும் பெம்மானே  ( - )

                        சரணம்  - 3

ஞான வைராக்ய விசார சார ஸ்வர 

ராக லய நடன பாதா

நாம பஜன குண கீர்த்தன நவவித 

நாயக ஜய ஜகந்நாதா ( - )

                சரணம் - 4

பார்வதி பாலா அபார வாரவர

பரம பகவ  பத தரணா 



பக்த ஜன ஸுமுக பிரணவ விநாயக 

பாவன பரிமள சரணா.  ( - )



                     ------×--------


                                பாடல்   - 4

பொம்ம பொம்மதா தைய தையனக்கு 

தின்னாக்கு னக்குதின் பஜன்கரே 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 

உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட 
தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
 திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
 உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா 
அவருவாசுவே கரம்பாஜிதி அநேக நாம்சதுர் கணராஜா
 தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
 பொம்ம பொம்மதா தைய தையனக்கு 
தின்னாக்கு னக்குதின் பஜன்கரே 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா
 வேணுவாஸரே அம்ருத குண்டலகீ 
தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
 வேணுவாஸரே அம்ருத குண்டலகீ
 தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
 நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
 நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
 திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட 
தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா 
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா 
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா 
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா 
பொம்ம பொம்மதா தைய தையனக்கு 
தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
 உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா.
          





1 comment:

  1. Super Thank you Mrs. Vasanthibalu. Arumai. Lyrics serthu anuppiirukengo. Thank you.
    By. MEENALOCHANI

    ReplyDelete