Wednesday 3 November 2021

தீபாவளி திருநாள்.


 


தீபாவளி. ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து ஜோதிஸ்வரூபமான சிவபிரானுக்கு வழிபாடு செய்யும் திருநாளாகும். இத்திருநாளில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்றுதான்  நரக சதுர்த்தசி எனும் தீபாவளி

இரண்யாட்சன் எனும் அசுரன் இப்பூமியை அண்டவெளி ஆழ்கடலில் முழ்கடிக்க ,அப்பொழுது மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனை வென்று, பூதேவியை தன் மூக்கால் தாங்கினார். அப்பொழுது எம்பெருமானின் ஸ்பரிசத்தால் உருவானவன் 'பவுமன்'  ( பவுமன் என்றால் பூமாதேவியின் புதல்வன் மற்றும் பலம் பொருந்தியவன் என்று பொருள்). பவுமன் இறவா வரம் வேண்டிதவம் இருக்க, பிரம்மா, பிறப்பு என்றால் இறப்பு நிச்சயம் எனக் கூறவும், எந்த தாயும் தன் மகனை கொல்ல   நினைக்க மாட்டாள் என்பதால் தன் தாயின் கையால் தான் தன் மரணம் நிகழவேண்டும் என்ற வரம் வேண்டினான். இந்த வரத்தினால் ஏற்பட்ட  மமதையினால் நரனாக அதாவது மனிதனாக இருந்தும் அசுர குணம்  கொண்டு  அனைவரையும் துன்பறுத்தினான். இதனால் நரகாசுரன் என பெயர் பெற்றான். 
    இதனால், மஹாவிஷ்ணு தன் கிருஷ்ணா அவதாரத்தின் போது  பூமி தேவியை 'சத்யபாமாவாக" அவதரிக்கச் செய்து மணந்து கொண்டார். பின், தான் தனித்து போருக்கு செல்வதாகவும், பாமாவே தனக்கு தேரோட்டவேண்டும் என அழைத்து சென்றார். போரில் நரகாசுரனின் கணைக்கு தான் மயங்கி விழுவது போல் நடித்தார். இதனால் வெகுண்ட சத்யபாமா தானே போரிட்டு அவனை வதம் செய்து, நரகாசுரன் பெற்ற வரத்தை நிறைவேற்றினாள். 


   உண்மை விவரம் அறிந்து அன்னை சத்யபாமா வருந்தினாலும், நரகாசுரன் மனம் மகிழ்வோடு இந்த நாளை மக்கள் நரக சதுர்த்தசியாக தீபாவளி திருநாளாக கொண்டாடி இன்புறவேண்டும் என வேண்டினான். 
அதன்பின், தங்களது மகன் இறப்பிற்க்கு கிருஷ்ணனும் சத்யபாமாவும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து தலைமுழுகினர். இதனால் தான் அதையே பின்பற்றி  தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் ஏற்பட்டது



No comments:

Post a Comment