இயற்றியவர்
சுப்பராம பாகவதர்
ராகம்: மாயாமாளவகௌள தாளம் ; ஆதி
பல்லவி
சரவணபவகுஹனே - உன்னை
சரணடைந்தேன் காத்திடுவாய் என்னை
அனுபல்லவி
அரவணை மேல் துயில் கொள்ளும் அந்த
ஆதிபுருஷனின் மருமகனே (--)
சரணம் -1
திருகயிலையில் ஒரு முழு கனி வென்றிட
செருக்குடனே உலகை வலம் வந்தாய்
குறுக்கு வழியில் விநாயகன் கனி பெற
வெறுப்புடன் பழனி குன்றினில் நின்றிடும் (--)
சரணம் - 2
வேலனும் வேடனும் விருத்தனுமாகிய
வேடம் புனைந்தொரு மாதை மணந்திட
நாடகமாடிய நாயகனே திருநீலகண்டனுக்கு ஞாலம் உரைத்த (--)
திருமதி வசந்தி பாலு மேடம்
ReplyDeleteநீங்கள் பாடிய சரவணபவகுஹனே பாடல் கேட்க அருமையாக இருந்தது
நன்றி
- V. Sugavanam
நன்றி.😄😇🙏🙏🙏
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் குரல் இனிமையாக இளமையாக இருக்கிறது
ReplyDeleteதிருமதி வசந்தி பாலு மேடம்
ReplyDeleteஉங்கள் குரலில் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது.
அற்புதம்
- V. Sugavanam
நன்றி. மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏
ReplyDeleteExcellent rendition. U hvnot even used shruti box for back round. Very nice voice. "2vadhu saranathula gnalam uraithava or gnanam uraithava? "
ReplyDeleteமிக அருமையான முருகன் பாடலை இனிமையாக பாடி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்
ReplyDeleteமிகவும் அருமையான குரலில் அழகான பாடல்
ReplyDelete