Friday, 31 December 2021
Sunday, 19 December 2021
திருவாதிரை சிவனார் நக்ஷத்திரம் 🤔 ?
திங்கட்கிழமை 20.12.2021 அன்று "ஆருத்ரா தரிசனம்". ஆருத்ரா என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் "ஆதிரை" என்பதாகும்.. இந்த ஆதிரை என்பது சிவனுக்கு உகந்த நக்ஷத்திரம். ஆதலால் உயர்வு கருதி 'திரு' எனும் அடைமொழி சேர்த்து "திருவாதிரை' என அழைக்கப்படுகிறது. 27 நக்ஷத்திரங்களில் திருவாதிரை ஆறாவது ஆகும்.
Saturday, 18 December 2021
சிதம்பரம் கோயில் தேர்த்திருவிழா".
தேர்த்திருவிழா.
மார்கழி 4 ஆம்தேதி டிச. 19 .2021 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் சிதம்பரம் கோயில் தேர்த்திருவிழா". "சிவகாமி அம்மை உடனுறை நடராஜ பெருமான்" தேரில் பவனி வரும் காட்சி.கோயிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய இயலாத முதியவர்கள் நோயாளிகள் போன்றவர்களுக்காக அந்த நாளில் கோயில் போன்றே அமைப்புடைய தேரில் இறைவனே எழுந்தருளி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக தன் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகம்.
Wednesday, 15 December 2021
மார்கழி மாத சிறப்புகள்.
Sunday, 12 December 2021
கார்த்திகையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்.ஏன்?
டிச. 14 ந்தேதி செவ்வாயன்று ஸ்ரீரங்கத்தில் மட்டும் 'வைகுண்டஏகாதசி' கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக மார்கழி மாதத்தில் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியில் தான் கொண்டாடப்படும். ஆனால் இந்த பிலவ வருடம் 2021 ல் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியிலேயே வைகுண்ட ஏகாதசியை ஸ்ரீரங்கம் கோயிலில் கொண்டாட இருக்கின்றனர்.
Saturday, 11 December 2021
திருப்பெருந்துறை - மாணிக்கவாசகர்
திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரை சிவபெருமான் ஆட்கொண்ட தலம் "திருப்பெருந்துறை'. குளம், ஆறு என நீர் நிலைகளில் மக்கள் இறங்கி நீராட வசதியாக இருப்பதை'துறை' என அழைப்பர். அவ்வண்ணமே, இறையருளை பேரின்ப நிலையை மாணிக்கவாசகர் பெற்ற இடமாக அமைந்ததாலும், அவர் போலவே நாம் அனைவரும் இத்தலத்து இறைவனை சரண் புக பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஈடில்லா பேரின்ப முக்திநிலையை அடையலாம் எனும் மெய்ப்பொருள் தத்துவத்தை விளக்கும் முகமாக, இத்தலம் 'திருப்பெருந்துறை' என அழைக்கப்ப்டுகிறது.
Thursday, 9 December 2021
நந்த சப்தமி 10.12.2021.வெள்ளிக்கிழமை.
கேட்பதை அருளும் காமதேனு
டிச. 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கார்த்திகை மாதம் சுக்ல பட்ச சப்தமி திதி. இதனை "நந்த சப்தமி" என்று அழைப்பர். இந்த நாளில் "கோ பூஜை" செய்வது மிகச் சிறந்த விசேஷமாகக் கூறப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாத சப்தமி திதி வெள்ளிகிழமையில் இந்த வருடம் அமைந்து வருவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.
Wednesday, 8 December 2021
"குக்கே சுப்பிரமணியர்" சுப்பிரமண்ய சஷ்டி, சம்பா சஷ்டி.
''சுப்பிரமண்ய சஷ்டி மற்றும் சம்பா சஷ்டி " விசேஷம் நிறைந்தது. முருகபெருமான் தாரகாசுரன் மற்றும் பத்மாசுரனின் சம்ஹாரத்திற்கென அவதரித்தவர். இவர் தேவ சேனாதிபதியாகவும், அனைத்து தெய்வங்களிலும் தனித்துவம் வாய்ந்தவராகவும் விளங்குபவர்.
ஐப்பசி மாத சூரசம்ஹாரத்தை அடுத்து வரும் இந்த கார்த்திகை மாத சுக்ல பக்ஷ சஷ்டியில்
"குக்கே சுப்பிரமணியர்"
திருத்தலத்தில் சுப்ரமணிய சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் விசேஷமாக முருகபெருமானை நினைத்து "ஸ்நானமும், தானமும்" செய்தால் நம் அனைவரது பாவங்களும் விலகும். ஸர்ப்ப தோஷமும் விலகும் என்பது ஐதீகம்.
கர்நாடக மாநிலத்தில் மங்களூர் அருகில் "குக்கே" எனும் கிராமத்தில், ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, "குக்கே சுப்பிரமணியராக" அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.
Friday, 3 December 2021
திருவிசையில் எழுந்தருளிய கங்கை.
டிசம்.4 ஆம்தேதி சனிக்கிழமை கார்த்திகை அமாவாசை திதி. திருவிசை நல்லூர் "கங்காகர்சனம்."
குச்சனூர் சனிபகவான் ஆராதனை 4.12.2021