Sunday 12 December 2021

கார்த்திகையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்.ஏன்?

 



டிச. 14 ந்தேதி செவ்வாயன்று ஸ்ரீரங்கத்தில் மட்டும் 'வைகுண்டஏகாதசி'  கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக மார்கழி மாதத்தில் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியில் தான் கொண்டாடப்படும். ஆனால் இந்த பிலவ வருடம் 2021 ல் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியிலேயே வைகுண்ட ஏகாதசியை  ஸ்ரீரங்கம் கோயிலில் கொண்டாட இருக்கின்றனர்.




  ஆழ்வார்களில் கடைசி பன்னிரண்டாவதுஆழ்வாரான திருமங்கை ஆழ்வார், தமிழ் திராவிட வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் அடியார்களால் ஓதப்பட, அதை எம்பெருமான் தன் தேவியருடன்  கேட்டருளவேண்டும் என்று வரமாக வேண்டியிருந்தார்.



அதன்படி, 
ஸ்ரீரங்கத்தில்  வைகுண்ட ஏகாதசி முன்பு பத்து நாட்கள் பகல் பத்து காலையில் ஓதப்படும் "திருமொழித் திரு நாள்" என்றும், 

வைகுண்ட ஏகாதசியிலிருந்து இராப்பத்து  சாயங்கால வேளையில், " திருவாய்மொழித் திரு நாள்" என நாலாயிரம் பாடல்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து இசைப்பர். 

இதற்கு 
    "திரு அத்யயன உற்சவம்" 
என்று பெயர்.


அதுவும் தவிர தை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் "தை தேர்த் திருவிழா" ஸ்ரீரங்கத்தில்
விமரிசையாக நடத்தப்படும்.



          ஆனால், இவ்வருடம் மார்கழி மாதக் கடைசியில் சுக்ல பட்ச ஏகாதசி "போகிப் பண்டிகையன்று" வருகிறது. அத்துடன் தேர்த் திருவிழா கொண்டாடவேண்டிய தை மாத புனர்பூச நக்ஷத்திரமும் தை மாதம் 4 தேதியிலேயே அமைந்து விட்டது. இம்மாதிரியான சூழல் பத்தொன்பது வருடத்திற்கு ஒருமுறை அமைந்து வரும். 
  இந்த அத்யயன உற்சவம் தடைபடக்கூடாது என்பதற்காக, கார்த்திகை வளர்பிறை ஏகாதசி திதியில் 'சொர்க்கவாசல்' திறப்பு நடத்தப்படுகிறது.
 

2 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    நாளை மறுநாள் (14.12.11) அன்று சில காரணங்களால் ஶ்ரீரங்கத்தில் மட்டும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது என்று அறிந்தோம்

    நன்றி மேடம்

    - V. Sugavanam

    ReplyDelete
  2. Good info. Nice images. Thank you

    ReplyDelete