Thursday 28 December 2023
நான் கண்ட குஜராத்.
Sunday 17 December 2023
ராமநாம மஹிமை & பரதனின் பக்தி
- இராமாயண காவிய கதாபாத்திரங்கள் அனைத்துமே பற்பல வாழ்வியல் நீதிகளை தானே வாழ்ந்து காட்டியுள்ளது என்றே கூறலாம்.
- அதில் எளியாரை இகழேல்!. அவ்வாறு இகழ்தலால் உண்டாகும் விளைவின் வாழ்வின் நியதியாக பரதனே ஒரு எடுத்துக் காட்டு. :
- வைகுண்டத்தில் இருந்து தன் பக்தரைக் காக்கும் பொருட்டு ஒருமுறை எம்பெருமான் மஹாவிஷ்ணு சங்கு சக்கரம் பாதுகைகள் என எதுவும் இன்றி, விரைந்து பூவுலகம் சென்றுவிட்டார். பாதுகைகள் அணியக் கூடிய நேரம் கூட தாமதம் ஏற்படுத்தி விடும் என்பதால், பாதுகைகளை கையில் எடுத்தவர் அதை அவசரமாக தலைமாட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
- எம்பெருமானின் கைகளில் தங்களைத் தாங்கியிருக்கும் பெருமையில், சங்கு சக்கரம் இரண்டும்,கால்மாட்டில் இருக்கவேண்டிய பாதுகை தலை மாட்டிற்கு இடம் பெயர்ந்தது அவைகளுக்குப் பிடிக்கவில்லை. அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் தான் இருக்கவேண்டும் என எம்பெருமானது பாதுகைகளை பலவாறாக இகழ்ந்தன.
- எம்பெருமான் வைகுண்டம் திரும்பியதும், அங்கு நிலவிய ஒருவித அமைதியில் நடந்ததை ஊகித்து அறிந்தார். காயப்பட்ட நிலையிலும், தன் பாதுகைகள் காட்டிக் கொடுக்காமல் பொறுமையுடன் இருந்ததைக் கண்டு, அதன் பால் மேலும் அன்பு பெருக, அதன் பெருமையை, சங்கு சக்கரத்திற்கு மட்டுமின்றி, இவ்வுலகுக்கே உணர்த்த திருவுளம் கொண்டார்.
- அதன்படி, சங்கு சக்கரமே ராமாவதாரத்தில், பரத சத்ருக்னனாக அவதரித்தனர். ராமர் மணிமுடி துறந்து, ஜடாமுடி தரித்து கானகம் சென்றதை அறிந்து , அவரை எப்படியாவது அரியணையில் ஏற்றியே தீருவேன் என பெரும் பிரயத்தனம் செய்த பரதனின் முயற்சிகள் தோல்வியுறவே , வேறு வழியின்றி, தாங்கள் இல்லாத அந்த அயோத்தி நகருக்குள் நானும் நுழையமாட்டேன், தங்களின் பாதுகைகளை அரியணையில் வைத்து பூஜித்து வருவேன். தங்களின் பாதுகைகளே இந்த 14 ஆண்டுகளும் ராஜ்ஜியத்தை வழி நடத்தும் என, உறுதிபடக் கூறி பாதுகைகளை தன் தலையில் சுமந்தவாறே அயோத்தியின் உள்ளே செல்லாமல் எல்லையில் உள்ள நந்திகிராமத்தில் இருந்தவாறே 'பாதுகா பட்டாபிஷேகம்' செய்து அவ்வண்ணமே நடந்தான்.
அண்ணனுக்கு உறுதுணையாக சத்ருக்னன் பரதனுக்கும் ராமபாதுகைக்கும் பணிவிடை செய்தான் பாதுகைகளை துச்சமாக எண்ணி இகழ்ந்தவர்களே அதன் மஹிமை உணர்ந்து அதை பூஜித்ததன் மூலம் கர்வம் அழிந்து புனிதமடைந்தனர். வாயிலில் இருக்கவேண்டிய பாதுகை என இகழ்ந்தவர்கள், அப்பாதுகைகளைத் தன் தலையில் சுமந்தனர். அத்துடன், நகரத்திற்க்குள் செல்லாமல்
ஆயினும் ராமபிரானுக்கு ஆச்சரியம் தாளாமல், ஏன்? எனது பானத்திற்கு கடல் வற்றவில்லை? எப்படி? என்ன காரணம்? என வருணதேவனிடம் கேட்டார்.
சித்ரா பௌர்ணமி 26.4.2021 திங்கட்கிழமை
நாளைய தினம் திங்கட்கிழமை 26.4.2021 சித்ரா பௌர்ணமி. . முழு நிலவை பார்ப்பது என்பது கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வையும் புத்துணர்வையும் அளிக்கக்கூடியது. ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி வருகிறது என்றாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனெனில், வருடத்தில் ஒரு முறை மட்டுமே இந்த சித்திரை மாதத்தில் மட்டுமே முழு நிலவாக களங்கங்கள் இல்லாமல் சூரியன் மறையும் பொழுது, பிரகாசமான ஒளிக் கிரணங்களுடன் காட்சி அளிப்பதே இதன் சிறப்பு.
இந்த நாளில் நம் பண்டைய தமிழ் மக்கள் தன் உற்றார், உறவினருடன் நதி நிலைகளில் பௌர்ணமி ஒளியில், அமர்ந்து உணவருந்தி, ஆடிப் பாடி மகிழ்வர்.
இந்த சித்ரா பௌர்ணமி நாளில், 'சித்ரகுப்த பூஜை' விசேஷமானது. இதையே பண்டைய நாட்களில் சித்திர புத்திர நயினார் நோன்பு' என நம் தமிழக மக்கள் பூஜித்தனர். யார் இந்த சித்திர குப்தர்? அவரது சரிதத்தை அறிவோம்!
திருவல்லிக்கேணி அழகிய சிங்கர்.
கேணி என்றால் குளம். அல்லிப் பூக்கள் நிறைந்த குளமாக விளங்கியதால் உயர்வு கருதி 'திருவல்லிக்கேணி' என அழைக்கப்படுகிறது. திருவல்லிகேணி என்றாலே பார்த்தசாரதி கோயில் தான் நினைவுக்கு வரும்.
ஆம்! மஹாபாரதத்தில் பார்த்தன் என போற்றப்பட்ட அர்ஜுனனுக்கு சாரதியாக தேரோட்டியாக விளங்கியதால், 'பார்த்தசாரதி' என கண்ணபிரான் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். பாரதப் போரில் கண்ணன் ஈடுபடாமல், போர் முழக்கம் அறிவிக்க மட்டும் சங்கை கையில் ஏந்தியிருப்பார். அவ்வ்வண்ணமே இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பரந்தாமனும் சங்கு மட்டுமே கையில் தாங்கியுள்ளார். போரில் அர்ஜுனனைக் காக்கும் பொருட்டு அவனைக் குறி வைத்து வந்த பாணங்களை எல்லாம் தன் திருமேனியில் தாங்கிய வடுக்களுடன் இங்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது. தேரோட்டிக்குரிய லட்சணமாக 'மீசை'யுடன் காணப்படுவதும் சிறப்பு. இதனால் இப்பெருமான் 'பார்த்தசாரதி' என்ற பெயர்க் காரணமாயிற்று. அது மட்டுமின்றி தன் மனைவி ருக்மிணி, சகோதரர் பலராமர் சாத்தகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் என மூன்று தலைமுறையுடன் குடும்பமாக காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்புடையதாகும்.
பரம பக்தனான பல்லவ மன்னன் 'தொண்டைமான் சக்கரவர்த்தி'யின் வேண்டுகோளுக்கிணங்கி திருப்பதி வேங்கடவன் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். அதனால் இவருக்கு 'வேங்கட கிருஷ்ணன்' என்ற திரு நாமமும் உண்டு.
பொதுவாக கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இடம் பெற்றிருப்பார். ஆனால், இத்திருக் கோயிலில் பார்த்தசாரதி தவிர 'வேதவல்லித் தாயாருடன் அரங்க நாதனும்', கருடன் மீதேறியவாறு வரதராஜ பெருமாளும், அழகிய ச்ருங்கராக, யோக நரசிம்மரும், ஐந்தாவதாக, ராமர் லக்ஷ்மணன், பரதன் சத்ருக்னன் மற்றும் அனுமனுடன் என ஐந்து மூலவர்கள் சன்னதிகள் இடம் பெற்றுள்ளதால், இது 'பஞ்சமூர்த்தித் தலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.
Saturday 16 December 2023
கிருஷ்ண லீலை தாத்பர்யம்.
கிருஷ்ணாஷ்டமி கோகுல கண்ணனின் ஜன்மாஷ்டமியை நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். காரணம் : கிருஷ்ணனின் வசீகரத்தோற்றமும், குறும்பு லீ
ஆடி கிருத்திகை.
சூரபத்மனை வென்றதனால், இந்திரன் தன் மகளான தேவயானையை முருகனுக்கு திருமணம் செய்வித்ததோடு முருகனை 'தேவசேனாதிபதியாகவும்" கொண்டாடினார்.
அத்துடன் குறத்தி மகளான 'வள்ளியை' தானே நாடி விரும்பி மணம் புரிந்து கொண்டார் முருகப்பெருமான்.
இதன் தாத்பர்யம் என்னவெனில், பரம் பொருளாம் முருகனின் பாத கமலத்தை அடைய இச்சா சக்தி ஞான சக்தி இரண்டுமே முயல்கிறது.
தேவசேனை ஞான சக்தி வடிவம். ஞானிகள் தாங்கள் புரியும் அனைத்து செயல்களிலும் இறை சிந்தனை ஒன்றையே கருத்தில் நிறுத்தி, முக்தி பெறுவர்.
வள்ளி இச்சா சக்தி வடிவம். உலக மாயையில் சிக்கிச் சுழலும்
சாமான்ய மக்களும் இறை சிந்தனையில் மூழ்கி முக்தி பெறவேண்டும் என்று தாமே அவர்களை ஆட்கொள்ளும் கருத்தாக வள்ளித் திருமணம் கதையின் உட்பொருளாக உள்ளது.
முப்புரி நூல் ஆவணி அவிட்டம்.
ருக்,யஜுர் , ஸாமவேத உபாகர்மா மற்றும் காயத்ரி ஜபம் இது பூணூல் அணியும் சடங்காகும். இளம் பிராயத்தில் அணிவிக்கப்படும் பூணூல் வாழ்நாள் முழுவதும் கழற்றாமல் அணிந்திருக்கவேண்டும் என்பது நியமவிதி. ஒவ்வொரு ஆவ்ணி அவிட்டத்தின் போதும் பழைய பூணூலை கழற்றி புதியது அணியவேண்டும்.
ஒரு பூணூலில் மூன்று பிரிகள் இருக்கும். வாழ் நாளில் மூன்று பூணூல்கள் அணிவிக்கப்படுகின்றன.சிறுவனின் உபநயனத்தின் போது ஒன்றும், திருமணத்தின் போது இரண்டாவதும், குழந்தை பிறந்தவுடன் மூன்றாவதும் அணிவிக்கப்படுகின்றது. வாழ் நாளில் அவரது கடைமைகளை நினைவுறுத்துவதற்காக அணியப்படுவதாக ஐதீகம்.