Saturday, 16 December 2023

ஆடி கிருத்திகை.

 


சூரபத்மனை வென்றதனால், இந்திரன் தன்   மகளான  தேவயானையை முருகனுக்கு திருமணம் செய்வித்ததோடு முருகனை 'தேவசேனாதிபதியாகவும்" கொண்டாடினார். 


     அத்துடன் குறத்தி மகளான 'வள்ளியை' தானே நாடி விரும்பி மணம் புரிந்து கொண்டார் முருகப்பெருமான். 


   இதன் தாத்பர்யம் என்னவெனில்,  பரம் பொருளாம் முருகனின் பாத கமலத்தை அடைய இச்சா சக்தி ஞான சக்தி இரண்டுமே முயல்கிறது. 


தேவசேனை ஞான சக்தி வடிவம். ஞானிகள் தாங்கள் புரியும் அனைத்து செயல்களிலும் இறை சிந்தனை ஒன்றையே கருத்தில் நிறுத்தி, முக்தி பெறுவர். 


    வள்ளி இச்சா சக்தி வடிவம்.  உலக மாயையில் சிக்கிச் சுழலும்


சாமான்ய மக்களும் இறை சிந்தனையில் மூழ்கி முக்தி பெறவேண்டும் என்று தாமே அவர்களை ஆட்கொள்ளும் கருத்தாக வள்ளித் திருமணம் கதையின் உட்பொருளாக உள்ளது. 



No comments:

Post a Comment