வெள்ளியன்று ' வரலக்ஷ்மி நோன்பு'.
அஷ்ட லக்ஷ்மி எனும் மஹாலக்ஷ்மியின் எட்டு வடிவங்கள் தவிர ஒன்பதாவதாக, பக்தர்களுக்கு, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வரமளிக்கும் லக்ஷ்மியாக விளங்குபவள் 'வரலக்ஷ்மி' என சாஸ்திரமும் அன்னையின் புகழ் பாடுகிறது.
இதனால் ஒன்பது இழைகளால் ஆன நூலில் ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை [சரடை] பூஜையில் வைத்து வரலக்ஷ்மி பூஜை செய்த பின்பு, பிரதம கிரந்திம், முதல், நவம கிரந்திம் [கிரந்திம் என்றால் முடிச்சு] என ஒன்பது முறை அந்த நோன்புச் சரடிற்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூக்களால் அர்ச்சனை செய்த பின்பு, வலது கையில் கட்டிக் கொள்வார்கள்.
அநேகமாக ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் வெள்ளிகிழமை அன்று 'வரலக்ஷ்மி விரத நோன்பு' கடைபிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment