ருக்,யஜுர் , ஸாமவேத உபாகர்மா மற்றும் காயத்ரி ஜபம் இது பூணூல் அணியும் சடங்காகும். இளம் பிராயத்தில் அணிவிக்கப்படும் பூணூல் வாழ்நாள் முழுவதும் கழற்றாமல் அணிந்திருக்கவேண்டும் என்பது நியமவிதி. ஒவ்வொரு ஆவ்ணி அவிட்டத்தின் போதும் பழைய பூணூலை கழற்றி புதியது அணியவேண்டும்.
ஒரு பூணூலில் மூன்று பிரிகள் இருக்கும். வாழ் நாளில் மூன்று பூணூல்கள் அணிவிக்கப்படுகின்றன.சிறுவனின் உபநயனத்தின் போது ஒன்றும், திருமணத்தின் போது இரண்டாவதும், குழந்தை பிறந்தவுடன் மூன்றாவதும் அணிவிக்கப்படுகின்றது. வாழ் நாளில் அவரது கடைமைகளை நினைவுறுத்துவதற்காக அணியப்படுவதாக ஐதீகம்.
No comments:
Post a Comment